India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டத்திற்கு உட்பட்ட சாத்தனூர் கிராமத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள காளான் வளர்ப்பு மையத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு காளான் வளர்ப்பு செயல்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக சக்தி என்பவர் இன்று பொறுப்பேற்று கொண்டார். தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட சக்தி என்பவருக்கு சக காவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்ட தனி பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கிளை அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா ஆக.19ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ம் தேதி வரை நடக்கிறது. 23-ஏ, ரங்கநாதன் தெரு, ஹோட்டல் உட்லண்ட்ஸ் காம்பளக்ஸ், முதல் மாடி, சென்னை – திருச்சி மெயின் ரோடு, விழுப்புரம் முகவரியில் இயங்கும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கிளை அலுவலகத்தில் சிறப்பு தொழில் கடன் விழா நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை சுதந்திர தினத்தை ஒட்டி 412 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்று தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கலாம். எனவே, பொதுமக்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் பிரசாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் விளம்பாவூர், புதுப்பட்டு, கரியாலூர், அம்மையகரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது. இதில் 15 துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐயிடம் மாற்றக்கோரி அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 9.05 மணிக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். இதில், பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி உளவுத்துறை எஸ்.ஐ பூங்குன்றம், கள்ளக்குறிச்சி உளவுத்துறை போலீஸ் சேட்டு, தியாகதுருகம் உளவுத்துறை போலீஸ் பிரபு ஆகிய மூன்று பேரும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். உதவி ஆய்வாளர் பூங்குன்றம் சென்னை சிறப்பு காவல் படைக்கும், போலீஸ் சேட்டு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கும், போலீஸ் பிரபு வரஞ்சரம் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத்தொழில் முனைவோரும், தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினமான வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி, சென்னையில் வழங்கப்படும். www.tntourismawards.com இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கி பூர்த்தி செய்து ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.
அரசம்பட்டை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கும் பூட்டை சேர்ந்த கலைச்செல்வி என்பவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று கிருஷ்ணன் குடித்துவிட்டு வந்து கலைச்செல்வியை கத்தியால் குத்தியுள்ளார். கலைச்செல்வி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் கிருஷ்ணனை இன்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.