India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி புறநகர் பகுதியில் வருகின்ற அக்டோபர்-02 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற உள்ள இடத்தை தற்போது காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விசிக மாவட்ட செயலாளர் அறிவுக்கரசு மற்றும் விசிக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வரும் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை மண்டல அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் டென்னிஸ், பளுதூக்குதல், வாள் விளையாட்டு, கடற்கரை கைப்பந்து, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்கள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (14.09.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டிஎன்பிசி குரூப் 2 தேர்வு என்று எழுதப்பட்டு வரும் நிலையில் தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களில் 13 ஆயிரத்து 61 பேர் இன்று தேர்வு எழுதுகிறார்கள்.எவ்வித மின்னணு பொருட்களும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதியன்று மிலாடி நபியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான டாஸ்மார்க், மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். உத்தரவை மீறி மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தியாகை பகுதியைச் சேர்ந்த இருசப்பிள்ளை என்பவர் திருமணமாகாமல் தியாகதுருகம் பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை செய்து அருகில் உள்ள சிவன் கோயிலில் சாப்பிட்டு விட்டு பேருந்து நிலையத்தில் தங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர் ராமு அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று அறிவிக்கப்பட்டது. அவசரகால தேவைக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தியாகதுருகம் புறவழிச் சாலையில் புதிதாக அமைத்து கொண்டிருக்கும் விருந்தினர் மாளிகை கட்டிடத்தின் உள்கட்டமைப்புகளை ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்த கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவர் உடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் என பலரும் உடன் இருந்தனர்.
நயினார்பாளையம் அருகே காளசமுத்திரத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் ஒரு மூதாட்டி உட்கார்ந்து இருப்பதைப் பார்த்த கலெக்டர் உடனடியாக காரில் இருந்து இறங்கி என்ன வேண்டும் என்று கேட்டார். அப்போது அவருக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். கலெக்டர் வீடு கட்ட உத்தரவிட்டு ஆனை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. திருக்கோவிலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது இந்திய துணைக்கண்டத்திலேயே தமிழ்நாடு தான் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதாகவும் அதற்கு காரணம் தமிழக முதல்வர் என்றும் கூறினார். மேலும், உதயநிதியின் பங்களிப்பை பேசிய அவர் உதயநிதி துணை முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது என்று பேசினார்.
Sorry, no posts matched your criteria.