India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி பள்ளியில் அரசு பள்ளி ஆசிரியராக இருப்பவர் சாமிதுரை இவருக்கு நேற்று பசுமை முதன்மையாளர் என்பதற்கான விருதை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். இதையடுத்து, விருது பெற்ற ஆசிரியர் தன் தாய் தந்தையிடம் காண்பித்து ஆசி பெற்றார், மகன் விருது பெற்றதைக் கண்ட தாய் தந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கல்வராயன்மலையில் உள்ள மணியார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் சுமார் 52 பயனாளிகளுக்கு அவர்கள் பயன்படுத்தி வரும் விவசாய நிலங்களுக்கு வன உரிமைச் சான்று வழங்கும் நிகழ்ச்சி கல்வராயன் மலையில் இன்று நடைபெற்றது இதில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் கலந்து கொண்டு வன உரிமைச் சான்றுகளை வழங்கினார் உடன் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இருந்தனர்
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் செப்.27ஆம் தேதி என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பயன்படலாம் என ஆட்சியர் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் பட்டாசு விற்பனை செய்வதற்கு தற்காலிக வெடிபொருள் விற்பனை உரிமம் பெற விருப்பம் உள்ளவர்கள் அரசு பொது சேவை மையத்தில் உரிய ஆவணங்களுடன் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரசு உத்தரவின்படி, தற்காலிக பட்டாசு உரிமம் கோரி அரசு பொது சேவை மையங்கள் மூலம் வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே வாணாபுரம், அரியனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் செப்.28ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்கு 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. காலை 9 மணி முதல் 3 மணி வரை தங்கள் சுய விவரத்தை பதிவு செய்து கொள்ளலாம். 10,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என மாவட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டும் மையம் தெரிவித்துள்ளது.
முதல்வரின் காக்கும் கரங்களின் புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். மேலும் என்ன மாவட்ட கலெக்டர் பிரசாந்த் அறிவித்துள்ளார்
கலை பண்பாட்டு துறை தஞ்சாவூர் மண்டலம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட சவகர் சிறுவர் மன்றம் சார்பாக மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகியவை எதிர்வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி காலை 9 மணி அளவில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி அரசு பள்ளி விளையாட்டு பிரிவு ஆசிரியர் சாமிதுரை, மரக்கன்று நடுதல் பனை விதைகள் விதைத்தல் போன்ற சமூக ஆர்வப் பணிகளில் துவரம் காட்டி வரும் நிலையில் பசுமையான வளங்களை உருவாக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சொந்த முயற்சியில் மரகன்றுகள் நட்டு வருகிறார். இதையடுத்து, அவருக்கு பசுமை தமிழக அரசின் பசுமை முதன்மையாளர் விருதை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் கலெக்டர் பிரசாந்த் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்( 23.9.2024 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுநலன் சார்ந்த 446 மனுக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் அளித்த 36 மனுக்கள் என மொத்தமாக 485 மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.