India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சியில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்த வழக்கில் அரசு பேருந்து ஓட்டுனர் செல்வராஜ், நடத்துனர் மணிவேல் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து பத்மநாபன், ராஜேஷ், திலீப்கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.இதனையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட பத்மநாபன் கடை மற்றும் வீடுகளில் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.85 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த இன்றுடன் விசாரணை நிறைவடைந்தது. இந்த நிலையில், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (19.09.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேலை நாடுனர்கள் தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வரும் 28ஆம் தேதி பகண்டை கூட்ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கல்வராயன்மலைப் பகுதி மக்கள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும், மலைவாழ் மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். மலைவாழ் மக்கள் விவகாரத்தில் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையில் திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு முதல்வரின் கவனத்தை ஈட்டிடும் வகையிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (18.9.2024) இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கநந்தல் பகுதியில் உள்ள சிவன் கோவில் சாமி, வடக்கநந்தல் பகுதியில் ஒரு சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்கு தெருவுக்குள் சாமிகள் வரவேண்டும் என்று கூறி வடக்கு நந்தல் பகுதியைச் சேர்ந்த லோக்சனா சக்தி மாநில பொதுச் செயலாளர் ஓவியர் ஆனந்த் தலைமையில் கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் இருந்து ஒரு வழிப்பாதையில் அனுமதியின்றி சென்ற 7 அரசு பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு தலா 500 ரூபாய் வீதம் 3500 ரூபாய் அபராதம் விதித்து உளுந்தூர்பேட்டை போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இன்று போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2021-ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்வான பிரதிநிகளின் பதிக்காலம் 19-10-2026 அன்று நிறைவடைகிறது. பதவிக்காலம் குறித்து ஐயம் தெரிவிக்கும் கடிதங்கள் ஆணையத்திற்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். 2024 டிசம்பரில் தேர்வான பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைவதாக கள்ளக்குறிச்சியில் வதந்தி பரவுகிறது. ஊராட்சி தலைவர்களுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாநில தேர்தல் ஆணையம் கடிதம்.
Sorry, no posts matched your criteria.