India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென் கிழக்கு வங்கக்கடலில், நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் வரும் டிச.1ம் தேதி ஒரு சில இடங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் டிச.2ம் தேதியும் ஈரோட்டிற்கு, கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காங்., மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை காங்., தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சந்தித்து பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், மூச்சுதிணறல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலைய நேற்று முதல் சற்று பின்னடைவு காரணமாக ICU-வில் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைியல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து விசாரித்தார்.
ஈரோடு மல்லிக்கை சேர்ந்தவர் சுப்பிரமணி ( 55). கூலித்தொழிலாளி. இவர் ஈரோடு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை வலைவீசி தேடி வந்தனர்.இந்தநிலையில் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த சுப்பிரமணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் மாதாந்திர (நவம்பர்) வேளாண் குறைதீர் கூட்டம் வரும் நாளை (நவம்பர் 29) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் பங்கேற்று தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார். இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நுட்புநர் மற்றும் ஓட்டுநர் பணியிடத்துக்கு வரும் நவ.30ம் தேதி காலை 11:30 மணி முதல் 2 மணி வரை, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், டிபி ஹாலில் நேர்முகத் தேர்வு நடக்கிறது. அவசர கால மருத்துவ நுட்புநர் பணிக்கு அடிப்படைத் தகுதிகளான, பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (12 ஆம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்).
ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பாதை வழியாக, கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய, பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இன்று மதியம் கோழி பாரம் ஏற்றி வந்த வாகனம், பர்கூர் மலைப்பாதையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு, கொல்லம்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான கைப்பை, சணல் பை தயாரிப்பு இலவச பயிற்சி வகுப்பு வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவா்கள் 0424-2400338, 8778323213, 7200650604 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை முறையாக மாநகராட்சியில் வருகிற டிசம்பர் 31க்குள் பதிவு செய்து உரிமம் பெறாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எவ்வித தொற்றுநோய் ஏற்படாமல் கவனமாக கண்காணித்து வர வேண்டும். ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டால், மாநகர நல அலுவலருக்கு விபரம் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.