Erode

News December 4, 2024

ஈரோடு அருகே கூலித்தொழிலாளி தற்கொலை!

image

ஈரோடு மாணிக்கம் பாளையம் பாண்டியன் நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் நிசார் மகன் அப்சர் அலி (32). சுமை தூக்கும் தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உடையவர். போதிய வருமானம் இல்லை என, மனைவி ஜான்மீயிடம் புலம்பியுள்ளார். இந்நிலையில், நேற்று (டிச 3) மனவிரக்தியில் இருந்த அப்சர் அலி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 4, 2024

 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

image

பவானி செல்லியாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு 05.12.2024 மற்றும் 08.12.2024 2 நாட்கள் பவானியில் வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டூரில் இருந்து ஈரோடு வரும் வாகனங்கள் பவானி புது பாலம் வழியாக செல்ல வேண்டும். அந்தியூர், ஆப்பக்கூடல் வழியாக ஈரோடு வரும் வாகனங்கள் தளவாய்பேட்டை வழியாக செல்ல வேண்டும் என பவானி காவல் மற்றும் பவானி போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.

News December 4, 2024

சாலை விரிவாக்க பணிக்காக கோவில் இடித்து அகற்றம்

image

ஈரோட்டில் இருந்து மேட்டுப்பாளையம் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி, தற்போது சித்தோடு முதல் கோபி வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோபி அருகே கரட்டடிபாளையத்தில் சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த மாரியம்மன் கோயில், அகற்ற முடிவு செய்யப்பட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோவில் நிர்வாகிகளிடம் நிவாரணம் வழங்கப்பட்டது. இந்நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் கோயில் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது.

News December 4, 2024

ஈரோடு கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு

image

கோவை, திருப்பூர், ஈரோட்டைச் சேர்ந்த ஓவியர்கள், சிற்பக்கலைஞர்கள் தங்களது படைப்புகளை சந்தைப்படுத்தி, காட்சிப்படுத்தி பரிசுகளை அள்ளலாம். இதில் முதல் 7 கலைஞர்களுக்கு ரூ.5000, 2ஆம் பரிசு ரூ.3,000, 3ஆம் பரிசு ரூ.2000 வழங்கப்படும். இதற்கு தங்களது படைப்புகளை டிச.10ஆம் தேதிக்குள் மண்டல கலை பண்பாட்டு மையம், அரசு இசைக்கல்லூரி வளாகத்திற்கு அனுப்பவும். மேலும், விவரங்களுக்கு 94422-13864 என்ற எண்ணை அழைக்கலாம்.

News December 4, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல் 

image

சர்வதேச மாற்று திறனாளிகள் தின விழா இன்று ஈரோடு கூர பாளையம் நந்தா கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கினார். உடன் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலம் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

News December 3, 2024

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம், தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் கடன் பெற விரும்புவோருக்கு ஈரோடு மாவட்ட கூட்டுறவு நகர வங்கியின் தலைமையகத்தில், டிசம்பர் 7ஆம் தேதி முகாம் நடைபெற உள்ளது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 3, 2024

தேவையான உரங்கள் இருப்பு: வேளாண் உதவி இயக்குநர்

image

ஈரோடு மாவட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில், விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய யூரியா உரம் 5,578 மெட்ரிக் டன், டிஏபி உரம் 1,634 மெ.ட, பொட்டாஷ் உரம் 3,993 மெ.ட, காம்ப்ளக்ஸ் உரம் 5,916 மெ.ட, சூப்பர் பாஸ்பேட் 1,264 மெ.ட இருப்பில் உள்ளது. எனவே, விவசாயிகள் தேவையான உரங்களை பெற்று கொள்ளலாம் என மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

News December 3, 2024

தேசிய அடைவுத் தேர்வு 

image

மத்திய அரசின் சார்பில் பள்ளிகளில் 3, 6, 9-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய அடைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் மாணவ, மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பள்ளிகளின் ரேங்க் வெளியிடப்படுகிறது. இதற்கான தேர்வு ஈரோடு மாவட்டத்தில் 4ம் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

News December 3, 2024

கிரிக்கெட் அணிக்கு பெண் வீராங்கனைகள் தேர்வு

image

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், ஈரோடு மாவட்ட பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு டிசம்பர் 8ஆம் தேதி காலை 7 மணிக்கு, ஈரோடு – திண்டல், கே.எஸ்.கிரிக்கெட் நெட்டில் நடைபெற உள்ளது. இதில் 31-08-2012 தேதிக்கு முன்பு பிறந்த பெண்கள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள், ஆவணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் பங்கேற்கலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

News December 3, 2024

ஈரோட்டில் கனமழை பெய்யும்

image

தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களை புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. அதன் காரணமாக ஈரோடு மாவட்டத்திற்கு தற்போது அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 நாள் மழை பெய்துவரும் நிலையில், மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!