Erode

News February 28, 2026

ஈரோடு: டிகிரி இருந்தால் ரூ.55,000 சம்பளத்தில் வேலை!

image

ஈரோடு மக்களே, பெடரல் வங்கியில் (Federal Bank) காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.38,666 முதல் ரூ.55,833 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 04.03.2026 ஆகும். SHARE பண்ணுங்க!

News February 28, 2026

ஈரோடு: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு<<>> க்ளிக் செய்து Grievance Redressal, ஈரோடு மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7- 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க

News February 28, 2026

+2 பொதுத்தோ்வு வினாத்தாள் 4 மையங்களில் இருப்பு வைப்பு

image

ஈரோடு,தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தோ்வு வரும் மாா்ச் 2- ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 26- ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வினை 23,307 மாணவ, மாணவிகளும், தனித்தோ்வா்கள் 669 போ் எழுத உள்ளனா். இவா்கள் தோ்வு எழுத வசதியாக மாவட்டத்தில் 107 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை 4 மையங்களில் வைத்து சீலிடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News February 28, 2026

ஈரோடு: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.

2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News February 28, 2026

ஈரோட்டில் அரங்கேறிய பகீர் மோசடி! JUDGMENT

image

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் ஈரோடு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. தங்களை அதிகாரிகள் என பொய்க்கூறி ஏமாற்றிய ராஜேஸ்வரன் (42) மற்றும் சென்னியப்பன் (40) ஆகிய இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்குத் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

News February 28, 2026

சத்தியமங்கலம் அருகே குடும்பப் பிரச்சினை கொடூர முடிவு!

image

சத்தியமங்கலம் பெரியூர் பகுதியைச் சேர்ந்த பசுபதியின் மனைவி நித்யா, குடும்பத் தகராறு காரணமாக நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தகவலறிந்து வந்த சத்தியமங்கலம் போலீசார், நித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 28, 2026

அரசு வேலை மோசடி: 2 பேருக்கு 6 ஆண்டு சிறை

image

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் ஈரோடு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. தங்களை அதிகாரிகள் என பொய்க்கூறி ஏமாற்றிய ராஜேஸ்வரன் (42) மற்றும் சென்னியப்பன் (40) ஆகிய இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்குத் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

News February 27, 2026

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது: 100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098.

News February 27, 2026

ஈரோடு: துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது!

image

சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணிக்கு சென்றபோது கையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த இருவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும், சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், கிருஷ்ணமூர்த்தி என்பதும் மானை வேட்டையாடுவதற்காக வனப்பகுதிக்கு வந்ததாக கூறியுள்ளனர். அவர்களை கைது செய்த வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

News February 27, 2026

ஈரோடு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!