Erode

News December 10, 2024

சிறுதானிய உற்பத்தி அதிகரிக்க ரூ.1.47 கோடியில் சிறப்பு திட்டம்

image

ஈரோடு மாவட்டத்தில் சிறுதானியங்களான ராகி 3,780 ஹெக்டேர், சோளம் 30 ஹெக்டேர், கம்பு 135 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. மானிய விலையில் ராகி, சோளம், கம்பு விதை உற்பத்தி மற்றும் வினியோகம் செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.30 மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு நடப்பு ஆண்டில் ரூ.1.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செய்யப்பட்டுள்ளது என  ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News December 10, 2024

ஆன்லைனில் வேலை: ஈரோடு பெண்ணிடம் ரூ.5.29 லட்சம் மோசடி

image

ஈரோடு, கோபி அருகே உள்ள தண்ணீர்பந்தல்புதூரைச் சேர்ந்த சுபத்ரா (32) என்பருக்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை தொடர்பாக ரூ.5 லட்சத்து 29 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தகவல் வந்தது. இதனை நம்பி சுபத்ரா பணம் அனுப்பியுள்ளார். அதன்பின் வேலை அளித்த நபர், சமூக வலைதள பக்கத்தில் இருந்து விலகினார். இந்த புகாரில் எர்ணாகுளத்தில் பதுங்கி இருந்த உபைத் (41) என்பவரை ஈரோடு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

News December 9, 2024

லாரி மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

image

அந்தியூர் அருகே உள்ள கெட்டி சமுத்திரம் ஏரி பகுதியில், இன்று மாலை ஈரோட்டில் இருந்து கர்நாடகா மாநிலம் சென்று கொண்டிருந்த லாரி மீது, பைக் மோதியது. இதில் பைக் ஓட்டி வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அந்தியூர் போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News December 9, 2024

சைபர் கிரைம் பற்றிய வங்கி கிளை மேலாளர்கள் கூட்டம்

image

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நேற்று கிளை மேலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி கலந்து கொண்டு பேசினார். இதில் வங்கிப் பணியாளர்களுக்கு சைபர் கிரைம் பற்றிய விளக்கங்களையும், எதிர்கொள்ள வேண்டிய சவால்களை குறித்தும் விளக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் மேலாளர் பலர் கலந்து கொண்டனர். 

News December 9, 2024

சைபர் கிரைம் பற்றிய வங்கி கிளை மேலாளர்கள் கூட்டம்

image

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நேற்று கிளை மேலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி கலந்து கொண்டு பேசினார். இதில் வங்கிப் பணியாளர்களுக்கு சைபர் கிரைம் பற்றிய விளக்கங்களையும், எதிர்கொள்ள வேண்டிய சவால்களை குறித்தும் விளக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் மேலாளர் பலர் கலந்து கொண்டனர். 

News December 9, 2024

ஈரோட்டில் மகன்கள் மீது தீ வைத்த தந்தை கைது

image

ஈரோடு, மாணிக்கம்பாளையத்தில் குடும்ப தகராறில் திருமலைச்செல்வன் என்பவர் தனது மனைவி, இரு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அதில் 4 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், திருமலைச்செல்வன் தலைமறைவானார். மனைவி சுகன்யா அளித்த புகாரின் பேரில் ஈரோடு வடக்கு போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் திருமலைச்செல்வன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

News December 9, 2024

திமுகவை பார்த்து விஜய் பயப்படுகிறார் – சு.முத்துசாமி

image

வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் நேற்று அளித்த பேட்டியில், “விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக இயக்கத்தின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார். அந்த கட்சியில் உள்ளவர்கள் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். திமுகவை பார்த்து பயப்படுவதால் நடிகர் விஜய் திமுகவுக்கு எதிரான கருத்துகளை பேசி வருகிறார். வரும் சட்டசபை தேர்தலிலும் திமுகவின் பலத்தை நிரூபிப்போம்” என்றார்.

News December 9, 2024

ஊக்கத்தொகை பெற திறனாய்வு தேர்வு எழுத மாணவர்களே தயாரா?

image

சென்னை அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் ஊரக திறனாய்வு தேர்வு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 15 மையங்களில் வரும் 14ம் தேதி தேர்வு நடக்கிறது. சுமார் 2,700 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பிளஸ்-2 படிக்கும் வரை ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 8, 2024

சிறை கைதி உருவாக்கிய சோலார் ஆட்டோ

image

ஈரோடு கவுந்தப்பாடியை சேர்ந்தவர் யுக ஆதித்தன் (32). கொலை வழக்கில் சேலம் அழகாபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்று, 7 வருடமாக கோவை சிறையில் உள்ளார். ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர், சிறைச்சாலையின் பணிமனையில் பணியாற்றி வருகிறார். அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு, சூரிய சக்தியால் இயங்கும் ஆட்டோவை, வடிவமைத்தார். அதை மக்களின் பார்வைக்கு போலீஸ்சார் கொண்டுவந்தனர்.

News December 8, 2024

ஈரோட்டில் 5 ஆடுகளை  கடித்துக் கொன்ற தெருநாய்கள்

image

ஈரோடு சாஸ்திரிநகரை சேர்ந்த விவசாயியான தங்கவேலு, 5 ஆடுகளை வளர்த்து வந்தார். அந்த பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்கள், நேற்று இரவு, தங்கவேலு வளர்த்து வரும் ஆட்டு கொட்டகைக்குள் புகுந்து, 5 ஆடுகளை கடித்து குதறின. இதில் 5 ஆடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன. காலையில் தங்கவேலு எழுந்து பார்த்தபோது, ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உரிய இழப்பீடு வழங்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!