India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகே பனங்காட்டுப்பாளையம் விவசாயி காமராஜின் தோட்டத்தில், காட்டுப்பன்றியை வேட்டையாட மர்ம நபர்கள் ‘அவுட்காய்’ (நாட்டு வெடி) வைத்துள்ளனர். அப்போது மேய்ச்சலில் இருந்த பசு மாடு அதனைத் தெரியாமல் கடித்ததில் வெடி விபத்து ஏற்பட்டு, மாட்டின் வாய் உருக்குலைந்தது. சம்பவம் குறித்து வனத்துறையினரும் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, வெடி வைத்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகே பனங்காட்டுப்பாளையம் விவசாயி காமராஜின் தோட்டத்தில், காட்டுப்பன்றியை வேட்டையாட மர்ம நபர்கள் ‘அவுட்காய்’ (நாட்டு வெடி) வைத்துள்ளனர். அப்போது மேய்ச்சலில் இருந்த பசு மாடு அதனைத் தெரியாமல் கடித்ததில் வெடி விபத்து ஏற்பட்டு, மாட்டின் வாய் உருக்குலைந்தது. சம்பவம் குறித்து வனத்துறையினரும் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, வெடி வைத்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

மத்திய அரசின் 2025-26 கல்வி ஆண்டுக்கான இன்ஸ்பயர் விருது பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 2,336 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 97 மாணவர்கள் இடம் பெற்று மாநில அளவில் 3-ம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக 45 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வாகி தனியார் பள்ளிக்கு இணையான புத்தாக்க சிந்தனையை நிரூபித்துள்ளதாக மாவட்ட கலெக்டர் கந்தசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (மார்ச்.04) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

ஈரோடு மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

ஈரோடு மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் <

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் 4-வது வார்டு காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரன், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். கோபி நகரச் செயலாளர் பிரினியோ கணேஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவருக்குக் கட்சித் துண்டு அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடனிருந்தனர். இது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளானது.
Sorry, no posts matched your criteria.