India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் இதுவரை 190 தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி காஞ்சிகோவில் ரோட்டில் அவர் உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, நாளை மாலை 5.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் பவானியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஈரோட்டில் பிளஸ்-1 படித்து வந்த மாணவர் சர்வின், தனது நண்பர் ஜெயன் என்பவருடன் பின்னால் அமர்ந்து சென்றபோது, வில்லரசம்பட்டி பிரிவு அருகே எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியது. இந்த விபத்தில் சர்வின் உயிரிழந்தார். ஸ்ரீஜெயன் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்

ஈரோடு மாவட்டத்தில் இன்று (07.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377 2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500 3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090 4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098 5. முதியோருக்கான அவசர உதவி : 1253 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்கள் கேக் வெட்டி, பெண் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஈரோடு மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் சிறப்புக் காவலர்களாகப் பணியாற்ற 65 வயதிற்குட்பட்ட, உடல்நலனுள்ள முன்னாள் படைவீரர்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி அழைப்பு விடுத்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையுடன் ஈரோடு காந்திஜி ரோடு, ஜவான் பவனிலுள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் பதிவு செய்துகொள்ளலாம். SHAREIT
Sorry, no posts matched your criteria.