India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இந்நிலையில், ஈரோடு அடுத்த சோலார் பகுதியில் பிரமாண்ட விழா மேடை அமைக்கும் பணி விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த ஊராட்சிக்கோட்டை பகுதியில் வேதகிரி மலை உள்ளது. இந்த மலையில் சிறப்புமிக்க சைவ-வைணவ திருத்தலமாக உள்ள சிவன் மற்றும் விஷ்னு சன்னிதி உள்ளது. முதன்மையானவராக வேதகிரீஸ்வரர் உள்ளார். மேலும் வரதராஜ பெருமாள், வேதவியாசர், ஆஞ்சநேயர், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிகள் உள்ளது. இக்கோவிலில், இன்று கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு கிழக்கு மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது
பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று அணைக்கு நீர்வரத்து 3,629 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், அணை நீர்மட்டம் 99.21 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 28.11 டி.எம்.சி.,யாக உள்ளது. பாசனத்திற்காக வினாடிக்கு 406 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று அணைக்கு நீர்வரத்து 3,629 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், அணை நீர்மட்டம் 99.21 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 28.11 டி.எம்.சி.,யாக உள்ளது. பாசனத்திற்காக வினாடிக்கு 406 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 20ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க இருக்கும் நிகழ்ச்சியின் விழா மேடை அமைக்கும் பணியினை இன்று தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு மாநகராட்சி கமிஷனர், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு செட்டிபாளையம் அருகில் பாரதி பாளையம் முதல் தெருவை சேர்ந்தவர் நல்லசிவம். இவருடைய மனைவி கண்ணம்மாள் (55). நேற்று இவருடைய அண்ணன் மைத்துனர் சிவகுமார், சொத்துப் பிரச்சினையை காரணம் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரத்தில் சிவகுமார் கண்ணம்மாவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். கண்ணம்மாள் அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிர் இழந்தார். டவுன் போலீசார் சிவகுமாரை தேடி வருகின்றனர்.
கிராமங்களில் அரசு பள்ளிகளில் 9-ம் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு சிறந்த மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.14) நடக்கும் இந்த தேர்வின் வினாத்தாள்கள் ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோட்டில், மொபைல் ஆப் மூலம், பணம் முதலீடு செய்து சம்பாதிக்கலாம் என, முகம் தெரியாத நபரிடம் வரும் குருஞ்செய்திகளை, நம்ப வேண்டாம். அவர்களிடம் யுபிஐ பின் நம்பரை கொடுத்து ஏமாற வேண்டாம் என ஈரோடு மாவட்ட காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் சைபர் குற்ற புகார்களை http://cybercrime.gov.in என்ற இணையதளம் அல்லது 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் இன்று (டிச.12) நேரில் சந்தித்து கடிதம் அளித்தார். அதில், ஈரோட்டில் காளை மாட்டு சிலையிலிருந்து, லோட்டஸ் ஆஸ்பிட்டல் வழியாக, நாடார் மேடு வரை செல்லும் நான்கு வழிச்சாலை மேம்பாலம் அமைத்தல், கே.கே., நகர் – சென்னிமலை ரோடு நான்கு வழி மேம்பாலம் அமைப்பது தொடர்பாக, கடிதம் அளிக்கப்பட்டது.
ஈரோடு மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சார்பில், கார்த்திகை தீபம் திருநாளை முன்னிட்டு, ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து, திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, ஈரோட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலாக 75 சிறப்பு பேருந்துகள் இன்று முதல், வரும் 14ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.