Erode

News December 23, 2024

ஈரோடு மாவட்டத்தில் நேற்றைய மழைப் பொழிவு

image

ஈரோடு மாவட்டத்தில் நேற்று அந்தியூர் வரட்டு பள்ளம் பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 17.90 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில் ஈரோட்டில் 2.30 மி.மீ, மொடக்குறிச்சியில் 3.00 மி.மீ, பவானி 2.60 மி.மீ, சென்னிமலை 3.00 மி.மீ, இழந்தன் குட்டை மேடு 3.20 மி.மீ, கொடிவேரி அணை 1.20 மி.மீ, குண்டேரி பள்ளம் 2.60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

News December 23, 2024

ஈரோட்டில் நாம் தமிழர் தனித்து போட்டி: சீமான் தகவல்

image

ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பல இடங்களில் கொலைகள் நிகழ்கின்றன. நடிகர் விஜய் எனது தம்பி, திமுகதான் எனது எதிரி. மேலும், ஈரோட்டில் நாம் தமிழர் தனித்து போட்டியிடுவோம் என கூறினார்.

News December 23, 2024

ஈரோட்டில் ரூ.3,559.60 கோடி பயிர் கடன் வழங்கல்

image

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் (2021-2022 முதல் 2023-2024 வரை) பயிர்க்கடனாக 2 லட்சத்து 92 ஆயிரத்து 724 நபர்களுக்கு ரூ.3,559.60 கோடியும், கால்நடை பராமரிப்புக் கடனாக 51,649 நபர்களுக்கு ரூ.308.87 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வட்டியில்லா பயிர்கடன் வழங்கும் திட்டத்தில் ஈரோடு மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்ந்து வருகிறது.

News December 22, 2024

ஈரோடு: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ ஈரோட்டில் 2வது நாளாக இன்றும் மழை ➤ தாளவாடியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் ➤ ஈரோடு திண்டலில் கோவில் நிலம் மீட்பு ➤ பெருந்துறை ரூ.1.90 கோடிக்கு கொப்பரை ஏலம் ➤ அம்மாபேட்டை அருகே குடிசை வீடு தீப்பிடித்து விபத்து ➤ அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை ➤ பெருந்துறையில் மினி மராத்தான் போட்டி ➤ ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து போட்டி: சீமான் ➤ குட்கா விற்பனை செய்தவர் மீது வழக்கு

News December 22, 2024

தாளவாடியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்!

image

ஈரோடு தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையோரம் உள்ள ஓடையின் அருகே, 3 இடங்களில், மருத்துவக் கழிவுகள், குவியல் குவியலாகக் கொட்டப்பட்டுக் கிடந்துள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தாளவாடியில் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவக் கழிவுகளை, மர்ம நபர்கள், இங்கு வந்து கொட்டி சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.

News December 21, 2024

ஈரோடு கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம்

image

ஈரோடு கோட்ட வருவாய் அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம், வரும் டிசம்பர் 24ஆம் தேதி, ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ரவி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்ட விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்று, தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 21, 2024

ஈரோடு: ஐயப்பன் கோவிலில் 18ஆம் படி ஏறிய பெண்கள்

image

புன்செய்புளியம்பட்டியில், பிரசித்தி பெற்ற தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை, 18ம் படி திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி, இன்று அதிகாலை 4 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, ஐயப்பனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின் 18ம் படி திறக்கப்பட்டது. ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி, பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் 18ஆம் படி ஏறி ஐயப்பனை தரிசித்தனர்.

News December 21, 2024

ஈரோடு: ஆட்சியர் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

image

ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள்,  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று போராட்டம் நடத்த வருவதாக, தனி பிரிவு போலீசார் தெரிவித்த தகவலை தொடர்ந்து, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News December 21, 2024

ஈரோட்டில் பலத்த மழை

image

ஈரோட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. இதனால் ஈரோட்டில் முக்கிய பகுதிகளான பன்னீர்செல்வம் பார்க், அரசு மருத்துவமனை ரவுண்டானா, ஈரோடு பேருந்து நிலையம், சென்னிமலை சாலை, ஆர்கேவி ரோடு, மேட்டூர் சாலை, பெருந்துறை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் ஈரோடு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உங்க ஏரியாவில் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க.

News December 20, 2024

ஈரோடு: திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர்!

image

ஈரோடு, சோலார் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறும் அரசு விழாவில், பங்கேற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.951.20 கோடியில் 559 முடிவுள்ள திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.133.66 கோடியில் 222 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.284.2 கோடி மதிப்பீட்டில், 50,088 பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

error: Content is protected !!