India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் பொருட்டு புதிய கைப்பேசி எண் 8903167788 முன்னோட்ட அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.3 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழாவை முன்னிட்டு, தமிழில் பெயர் பலகை அமைப்பது தொடர்பாக தொழிலாளர் நலத் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, வணிகர் சங்கத்தினர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் இல்லையெனில் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரோடு தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தெரிவித்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டிற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் ஈரோடு திருமகன் ஈவெரா சாலையில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டிற்கு நேற்று நேரில் சென்றனர். அங்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
ஈரோடு மாவட்டம் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய போது தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 24 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் இந்த சோதனை நடைபெற்றது. ஈரோடு கருங்கல்பாளையம், சூரம்பட்டி, சித்தோடு, பெருந்துறை, சென்னிமலை இந்த பகுதிகளில் லாட்டரி விற்ற நபர்களை போலீசார் கைது செய்தனர்.
கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வீடுகள், ஆலயங்களில் கிறிஸ்து பிறப்பு குடில் அமைக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் வாழ்த்துகளை மற்றவர்களுக்கு பரிமாறிக் கொண்டதுடன், கேக் மற்றும் அசைவ உணவுகளையும் பரிமாறி மகிழ்ந்தனர். அதுபோல் ஈரோடு பெரியார்நகரில் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, கிறிஸ்தவர்களுடன் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் வரி வசூலில் ஈரோடு 8ஆவது இடம் பிடித்துள்ளது. ஈரோடு மாநகராட்சி நிலுவை, நடப்பாண்டு வரி சேர்த்து58.47 கோடி ரூபாய் வசூல் செய்து 49.43 சதவீதத்துடன் 8ஆவது இடம் பிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் சென்னையை தவிர்த்து கோவை, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட 24 மாநகராட்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) ரவி தலைமையில், மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம், வரும் டிச.30ம் தேதி, மாலை 3 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று, குறைகளை தெரிவிக்கலாம் என்றும், மனுக்களை கொடுக்கலாம் என்றும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலிங்கராயன் வாய்க்கால் மூலமாக 15,743 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இங்கு மஞ்சள், வாழை, கரும்பு, நெல் போன்ற பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வாய்க்காலில் பாசனத்துக்காக, பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், 25-12-2024 முதல் 23-4-2024 வரை, 120 நாட்களுக்கு, 5,184 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், தண்ணீர் திறக்க குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த 14ம் தேதி காலமானார். இந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக்கழகம் இடைத்தேர்தலில் போட்டியிடாது என்றும், 2026 சட்டமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிடும் வகையில் கட்சியை வலுப்படுத்த உள்ளதாகவும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
பவானி அடுத்த ஒலகடம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (67). இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் நேற்றும், இன்றும் செல்வராஜ் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் அக்கம்பக்கத்தினர் உறவினருக்கு தகவல் அளித்தனர். பின் வீட்டின் மேல் ஏறி உள்ளே சென்று பார்த்தபோது, தலைப்பகுதியில் இரத்தம் வழிந்த நிலையில் செல்வராஜ் மர்மமாக உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.