India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோபி அருகே கொளப்பள்ளூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவர் கெட்டி செவியூர் மின்வாரிய அலுவலகத்தில், பணியாற்றி வருகிறார். கெட்டிசெவியூர் அரசு பள்ளி அருகே உள்ள, மின் கம்பத்தில், பழுது பார்க்க ஏறும் போது, 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தவர், தலையில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு, மாநில அளவிலான கலைத்திருவிழா நாளை (ஜன.3) மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான கலைத்திருவிழா ஈரோடு மாவட்டத்தில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி, இந்துஸ்தான் அறிவியல் வணிகவியல் கல்லூரி, கங்கா பள்ளி ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கவுந்தப்பாடி ஆகிய இரண்டு புதிய நகராட்சிகளை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் 13 புதிய நகராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில், பெருந்துறை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கவுந்தப்பாடி ஊராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, இந்த நகராட்சியுடன் சலங்கபாளையம் மற்றும் பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சிகள் இணைக்கப்படுகின்றன.
தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஈரோடு விற்பனைக்குழு பவானி ஒழுங்குமுறை கீழ்கண்ட வேளாண் பொருட்கள் விற்பனைக்கு தேவைப்படுகிறது. 100 கிலோ கம்பு, தினசரி 200 கிலோ கிளிமூக்கு மாங்காய், தர்பூசணி மற்றும் முலாம் பழம் போன்றவை தேவை உள்ளது என வேளாண்மை துணை இயக்குநர்/செயலாளர், தெரிவித்துள்ளார். கூடுதல் விவரத்திற்கு (99444-47261), (99444-47261) என்ற எண்களை அழைக்கலாம்.
ஈரோடு, பவானி மேட்டூர் சாலை, குட்டை முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 22). டிரைவர். இவர் ஈரோடு பகுதியைச் சேர்ந்த, 13 வயது சிறுமி குளிப்பதை, தனது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளார். இதை அறிந்த சிறுமி, பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், இது குறித்து புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, ஸ்ரீதரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோபி நகராட்சியுடன் பாரியூர், மொடச்சூர் வெள்ளாளபாளையம் குள்ளம்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகள் இணைத்து, நகராட்சியை விரிவாக்கம் செய்ய, மாவட்ட நிர்வாகத்திற்கு, தமிழக அரசு பரிந்துரைத்து, அரசு ஆணை வெளியிட்டுள்ளது. நகராட்சியில் வழங்கப்படும் வசதிகள், சேவைகள் இந்த ஊராட்சிகளுக்கும் வழங்கப்படும். மேலும் இந்த ஊராட்சிகள் நகராட்சிக்குரிய அனைத்து விதமான நகர்ப்புற பண்புகளைக் கொண்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
ஈரோடு ரயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த 2024ம் ஆண்டு, ரயில்களில் அடிபட்டு 84 ஆண்கள், 14 பெண்கள் என மொத்தம் 98 உயிரிழந்துள்ளனர். இதில், 71 பேர் அடையாளம் காணப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 10 பேர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர். மீதம் உள்ளவர்களில் ஒரு சிலர், ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளனர் என காவல்துறை கூறியுள்ளது.
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தேசியத் தலைவர்கள் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்தாண்டு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி ஜனவரி 8ஆம் தேதி காலை ஈரோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால சுன்கரா தெரிவித்துள்ளார், மனிதருள் மாணிக்கம், ரோசாவின் ராசா, ஆசிய ஜோதி தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெறும் என அவர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா ஈரோடு மாவட்ட மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நள்ளிரவு 12 மணிக்கு 2024 ஆம் ஆண்டு விடைபெற்று, 2025 ஆம் ஆண்டு பிறக்க இருக்கிறது. கடந்த ஆண்டுக்கு பிரிவு உபசாரம் நடத்தி, புதிய ஆண்டை வரவேற்க, ஈரோடு மக்கள் தயாராகி விட்டனர். அதன் பிரதிபலிப்பாக, பன்னீர்செல்வம் பூங்கா நினைவு தேவாலயம் முன்பு, ஏராளமானவர்கள் கூடி நிற்கின்றனர். இனிய புத்தாண்டை வரவேற்கும் விதமாக, இரவு 10 மணியில் இருந்தே, பட்டாசு வெடிக்க மக்கள் தொடங்கிவிட்டனர்.
Sorry, no posts matched your criteria.