India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் ”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக நாங்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். அப்படி நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் 100 % திமுக வெற்றி என்று சொல்லவில்லை. அப்படி சொன்னால் அருகில் இருக்கும் பெண்கள் 100% இல்லை.. 200% திமுக வெற்றி பெறும் என கூறுகிறார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இன்ஸ்டாகிராமில் தனது நகைச்சுவையான நடிப்பால் பிரபலமானவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராகுல். இவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகிறார்கள். மேலும், இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் ராகுல் நேற்று இரவு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது. கடந்த 10, 13 ஆகிய 2 நாட்களில், 9 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான இன்று, திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனுக்களை திரும்பப்பெற ஜன.20ம் தேதி கடைசிநாள்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் சந்திரகுமார், இன்று ஈரோடு மநகராட்சி அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரிடம், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் திமுக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், உள்ளிட்டோர் இருந்தனர். இடைத்தேர்தல் வரும் பிப்.5ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான இன்று, சீதாலட்சுமி இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் 4 வேட்பாளர்கள் இருந்தனர். ஈரோடு இடைத்தேர்தலில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் நேரடியாக களம் இன்றங்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வரும் பிப்.5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (ஜன.17) நிறைவடைகிறது. திமுக, நாம் தமிழர் கட்சி உட்பட சுயேச்சை வேட்பாளர்கள் பலர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைவரையும் போலீசார் சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில், 2024 போலீஸ் ஸ்டேஷன்களில் காணாமல் போனவர்கள் தொடர்பாக, 527 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்-சிறுமிகள்,பெண்கள், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர். குழந்தை விற்பனை தொடர்பான ஒரு வழக்கு, உ.பி.மாநிலத்துக்கு குழந்தையுடன் தாயை கடத்திச்சென்ற வழக்கு உள்பட, 31 சிறுவர்கள், 102 சிறுமிகள், 202 பெண்கள் 335 பேரை கடந்தாண்டில் மீட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ளது. கடந்த 10 மற்றும் 13 ஆகிய இரு நாட்கள் மட்டும், இதுவரை 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், இறுதி நாளான இன்று திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர். பகல் 11 மணிக்கு தொடங்கி, மதியம் 3 வரை வெட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக என்று பிரதான கட்சிகள் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கியிருக்கும் நிலையில், திமுக, நாதக போட்டியிடுகின்றன. இந்நிலையில் களத்தில் யாருமே போட்டிக்கு உறுதிசெய்யப்படாத நிலையில், முதல் ஆளாய் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் சுழன்றடித்து 3 நாட்களாக வீடு வீடாக சென்று வாக்கு கேட்டுவருகிறார்.
ஈரோடு, கடம்பூர் மலைக்கிராமம், உகினியத்தை சேர்ந்தவர் ராஜப்பன் (49) விவசாயி. தனது காட்டில் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளார். நேற்று இரவு சுமார் 7 மணிக்கு மக்காச்சோளக்காட்டிற்கு சென்றவரை, காட்டிற்குள் மறைந்திருந்த ஒற்றை யானை, தாக்கியதில் படுகாயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம், சத்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.