Erode

News January 21, 2025

3 வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில், 58 வேட்பாளா்கள், 65 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா். கடந்த 18 தேதி நடைபெற்ற பரிசீலனையில் 3 வேட்பாளா்கள் மனுக்கள் தள்ளுபடியாயின. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற, இறுதி நாளான திங்கள்கிழமை மேலும் 8 போ் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனா். ஈரோடு கிழக்கு தொகுதியில், 47 வேட்பாளா்கள் போட்டியில் உள்ள நிலையில், 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

News January 21, 2025

ஈரோட்டில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல், மாலை 4 வரை, பெருந்துறை, அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள், புளியம்பட்டி, ஆம்போதி, ஆலத்தூர், கடம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகள், மாக்கினாங்கோம்பை, அக்கரை கொடிவேரி, வரதம்பாளையம், புளியங்கோம்பை, பெரிய கொடுவேரி, சிவகிரி, சென்னம்பட்டி, கூகலூர், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News January 21, 2025

ஈரோடு மாவட்டத்தில் இசைக்கல்வெட்டுகள்

image

ஈரோடு மாவட்டம், அரச்சலூரில் உள்ள நாகமலை குன்றில் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இசைக்குறிப்புக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த இசைக் கல்வெட்டுகள் ஐந்தெழுத்துக்கள் இடமிருந்து வலமாகவும், ஐந்தெழுத்துக்கள் மேலிருந்து கீழாகவும் என்ற வகையில் அமைந்துள்ளன. இக்கல்வெட்டில் த-தை-தை என்பன போன்ற இசையமைதிகளுக்கான குறிப்புகள் (ஸ்வரங்கள்) உள்ளதாக இம்மலையின் முன்புறமுள்ள பலகை கூறுகிறது.

News January 20, 2025

ஈரோடு கிழக்கு: ஸ்டாலின் சொன்ன ஒரே வார்த்தை

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் கட்சி திமுகவை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்து விட்ட நிலையில், நாதக தைரியமாக எதிர்த்து நிற்கிறது. முதல்வர் ஸ்டாலினை தொடர்புகொண்ட அமைச்சர் முத்துச்சாமி, பிரச்சாரத்துக்கு வருவது பற்றி கேட்டிருக்கிறார். நீங்களே பார்த்துக்கலாமே! நான் வரணுமா என்ன? என்று ஸ்டாலின் கேட்டிருப்பதால் பிரச்சாரத்துக்கு செல்ல ஸ்டாலின் விரும்பவில்லை என்று தெரிகிறது.

News January 20, 2025

அந்தியூர் மருமகளுக்கு சர்வதேச திரைப்பட விருது

image

அந்தியூர் மருமகள் இயக்குனர் ராஜகுமாரன் மனைவி தேவயானி தயாரித்து, எழுதி, இயக்கியுள்ளது ‘கைக்குட்டை ராணி’ திரைப்படம். தாயை இழந்த, தந்தை வெளியூரில் பணிபுரியும் ஒரு பெண் குழந்தை எத்தகைய சிக்கல்களை சந்திக்கிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இப்படம் வெளிப்படுத்தியுள்ளது. ‘கைக்குட்டை ராணி’ குறும்படத்தை பார்த்த 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை தேவயானி விருது பெற்றார்.

News January 20, 2025

ஈரோட்டில் குவிந்த ராணுவ வீரர்கள்

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்.5 நடக்கிறது. இதில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுவதற்காக ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை ரயில் மூலமாக ஈரோட்டுக்கு வந்தனர். அவர்கள் வாகன சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியிலும், மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

News January 20, 2025

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் 47 பேர் போட்டியிடுகின்றனர். இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். இவருக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னம் ஒதுக்கியுள்ளது.

News January 20, 2025

ஈரோடு கிழக்கு: ஸ்டாலின் சொன்ன ஒரே வார்த்தை

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் கட்சி திமுகவை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்து விட்ட நிலையில், நாதக தைரியமாக எதிர்த்து நிற்கிறது. முதல்வர் ஸ்டாலினை தொடர்புகொண்ட அமைச்சர் முத்துச்சாமி, பிரச்சாரத்துக்கு வருவது பற்றி கேட்டிருக்கிறார். நீங்களே பார்த்துக்கலாமே! நான் வரணுமா என்ன? என்று ஸ்டாலின் கேட்டிருப்பதால் பிரச்சாரத்துக்கு செல்ல ஸ்டாலின் விரும்பவில்லை என்று தெரிகிறது.

News January 20, 2025

வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் இறுதிப் பட்டியல் இன்று வெளியானது. இத்தேர்தலுக்கான வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கால அவசாகம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், 47 பேர் பேட்டியிடுகின்றனர். திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் சார்பில் சீதாலட்சுமி உட்பட 47 பேர் களத்தில் உள்ளனர். இத்தொகுதிக்கு பிப்.5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 20, 2025

திடீரென மனம் மாறிய செந்தில்முருகன் வேட்புமனு வாபஸ்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட, சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த, அதிமுக நிர்வாகி செந்தில் முருகன், இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார். வேட்பு மனுக்களைத் திரும்பப்பெற இன்று கடைசி என்பதால் மனுவை திரும்பப்பெற்றார். முன்னதாக கட்சியின் அறிவிப்பை மீறி தேர்தலில் போட்டியிட்டதற்காக, அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

error: Content is protected !!