India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் களத்தில் திமுக, நாதக என இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ள நிலையில், இக்கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு வெற்றியை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி இருப்பதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 2) தனது கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதக சார்பாக சீதாலட்சுமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை செய்தார். நேற்று இரவு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற பரப்புரையில், நான் வெளி மாநிலத்தவராக இருந்திருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பே முதலமைச்சராக இருப்பேன் என கூறினார். 500-க்கும் 1000க்கும் கையேந்தும் பழக்கத்தை விடுங்கள் சிந்தித்து வாக்களியுங்கள் என்றார்.
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரப்புரையின் போது தபெதிகவினர், நாதகவிற்கு எதிராக பிரசுரம் அச்சடித்து விநியோகித்ததாக புகார் எழுந்துள்ளது. இதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது. எனவே, அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர மற்றும் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திமுக மற்றும் நாதக கட்சிகளிடையே இருமுனை போட்டி நிலவி வருகிறது.
பவானிசாகர் -புளியம்பட்டி சாலையில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற கல்லூரி பஸ்ஸை டிரைவர் பாலசுப்பிரமணியம் (40) ஓட்டி வந்துள்ளார். பஸ்சுக்கு முன்புறம் தொப்பை பாளையத்தைச் சேர்ந்த சுப்பையாகவுடா (82) பைக்கில் சென்றுள்ளார். பஸ்ஸும் – பைக்கும் தொப்பம்பாளையம் என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் அவர் உயிரிழந்தார்.
கரூர் – ஈரோடு தடத்தில் புகழூர், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக, சில ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி – ஈரோடு பயணியர் ரயில், வரும் 3 மற்றும் 6 தேதிகளில் காலை 7:20 மணிக்கு கிளம்பி, கரூர் வரை மட்டும் இயக்கப்படும். கரூர் முதல் ஈரோடு வரை ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டை – ஈரோடு எக்ஸ்பிரஸ், 3,6ம் தேதி இரு மார்க்கத்திலும் கரூர் – ஈரோடு ரத்து செய்யப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என மேற்கண்ட கியூஆர் கோடு அல்லது KYC-ECI (know your candidate) ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதனை ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தொழில் நகரமான திருப்பூர், ஈரோடு உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் வெளி நாடுகளுக்கு அதிகமாக அனுப்பப்படுகிறது. இந்நிலையில் 2025-2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில், பின்னலாடைகளுக்கு இறக்குமதி சலுகைகளை அறிவித்துள்ளார். இதனால், தொழில் நகரமாக கோவை, ஈரோடு, திருப்பூரில் தயாரிக்கும் பின்னலாடை ரகங்கள் உற்பத்தி (ம) விற்பனை பாதிக்கப்படும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக சீமான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முனிசிபல்சத்திரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரக் கூட்டம் நடத்தியதாக சீமான் மீது புகார் எழுந்தது. பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரில் சீமான், நா.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஈரோட்டில், தேர்தல் பணிக்கு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்.5ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிக்குச் செல்லும் 24 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் செல்லும் இடங்களில் தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்கும் வகையில் ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.