Erode

News February 4, 2025

இடைத்தேர்தல்: நாளை வாக்குப்பதிவு

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்காக மொத்தம் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண் வாக்காளர்கள் 1,10,128, பெண் வாக்காளர்கள் 1,17,381 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேர் என மொத்தம் 2,27,546 வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக வாக்கு எண்ணிக்கை பிப்.,8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

News February 4, 2025

சென்னிமலை முருகன் கோயில்: வாகனம் செல்ல தடை

image

சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தோ்த்திருவிழா ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியா் ப.ரவி தலைமை வகித்தாா். சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்.11 தேதி முதல் 16 தேதி வரை தனியாா் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

News February 4, 2025

இன்றும், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும்(பிப்.4), நாளையும் (பிப்.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாடி இல்லாத பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இங்கு தேர்தல் நாளை பிப்.5ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News February 3, 2025

53 தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

image

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை மறுநாள் (05.02.2025) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கிழக்கு தொகுதியில் 53 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை (04.02.2025) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளாக செயல்பட உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 53 அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நாளை கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 3, 2025

மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி: அமைச்சர்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார், அமைச்சர் முத்துசாமி தலைமையில், அக்ரஹாரம் பகுதியில் துவங்கி கருங்கல்பாளையம் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அப்போது பேசிய அமைச்சர், மிகப்பெரிய வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமாரை, வாக்காளர்கள் வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

News February 3, 2025

ஈரோடு கிழக்கு தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதனால் வெளியூரை சேர்ந்தவர்கள், உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News February 3, 2025

வடமாநில வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பு  

image

ஈரோடு மாநகராட்சி 36-வது வார்டு வெங்கடாஜல வீதியில் அமைந்துள்ள வடமாநில மக்களுக்கு சொந்தமான ராம் தேவ் கோவிலில் கவுன்சிலர் பழனியப்பா நா.செந்தில்குமார் தலைமையில் அமைச்சர் சு.முத்துசாமி, திமுக வேட்பாளர் சந்திரகுமார் ஆகியோர் வடமாநில வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்களுக்கு வடமாநிலத்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

News February 3, 2025

டாஸ்மாக் இன்று முதல் 4 நாட்கள் விடுமுறை

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (5ஆம் தேதி) நடைபெற உள்ளது. எனவே ஈரோடு கிழக்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஈரோடு கிழக்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், பிப்ரவரி 3 (இன்று) முதல் 5 வரையும் மற்றும் பிப்ரவரி 8ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News February 3, 2025

வெளியூரைச் சார்ந்தவர்கள் வெளியேற உத்தரவு

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. அதன்பிறகு தேர்தல் பிரச்சாரத்தில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும், வெளியூரைச் சேர்ந்தவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 6 மணிக்கு பிறகு வெளியேற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தனியார் விடுதிகள், திருமண மண்டபங்களில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் தங்கி இருக்கக் கூடாது.

News February 2, 2025

ஈரோடு இடைத்தேர்தல்: ஸ்டாலின் கடிதம்

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் களத்தில் திமுக, நாதக என இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ள நிலையில், இக்கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு வெற்றியை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி இருப்பதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 2) தனது கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

error: Content is protected !!