Erode

News February 15, 2025

குழந்தை உயிரழப்பு: போலீசார் விசாரணை

image

சென்னிமலை யூனியன் ஈங்கூர் அடுத்த செங்குளம் பகுதியில் வசிக்கும் ராஜேஷ் குமார். இவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோருக்கு 18 மாத தக்ஷிதா உள்ளார். குழந்தையை உடல் நலம் சரியில்லாமல் ஆயுர் வேத சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். போலீசார் விசாரணை.

News February 15, 2025

பெருந்துறையில் வங்கதேசத்தினர் 15 பேர் கைது

image

பெருந்துறை சுற்றி சிப்காட் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுடன் முறையாக அனுமதி இன்றி பங்களாதேஷ் சேர்ந்த வாலிபர்களும் விசா, பாஸ்போர்ட் இன்றி தங்கி பணியாற்றி வருகிறார்கள். அப்படிப்பட்ட வாலிபர்கள் 15 பேரை பெருந்துறை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 15, 2025

வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்துவிட்டு சிறுமி தற்கொலை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 14வயது சிறுமி, வாலிபர் ஒருவருடன் பழகி வந்தார். இதில் அவர் கர்ப்பம் அடைந்ததால், அந்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சித்தோடு பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த சிறுமி நேற்று தனது உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 15, 2025

ஈரோட்டில் ரூ.50,000 ஊதியத்தில் பணி

image

ஈரோடு மாவட்ட புள்ளியியல் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த ஊதிய அடிப்படையில் ‘இளம் தொழில் வல்லுநர்’ பணியிடம் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பதவி முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானது. மாதம் ஊதியம் ரூ.50,000. விருப்பம் உள்ளவர்கள் https://erode.nic.in என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து வரும் 21.02.2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News February 14, 2025

கல்வி உதவித்தொகை விண்ணப்பம் வரவேற்பு

image

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்லூரி அரசு ஒதுக்கீட்டில் பயிலும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவ, மாணவியர் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை, பிரதம மந்திரியின் யோஜனா திட்டத்தில் பெறலாம்.கூடுதல் விபரத்துக்கு ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண்: 0424 2260155 என்ற எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளவும்.

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 71 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க வேண்டும்<<>>. ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

ஈரோடு பண்ணாரி மாரியம்மன்

image

சத்தியமங்கலம் பண்ணாரி பகுதியில் பண்ணாரி மாரியம்மன் வீற்றிருக்கிறாள். சுற்றிலும் வனப்பகுதி, அரணாக மலை, அரண்மனை போல கோவில், இப்படி வனம் ஆளும் தேவதையாக பண்ணாரி மாரியம்மன் உள்ளார். அனைத்துவித தடைகளையும் போக்கும் சர்வ வல்லமை கொண்ட மாரியம்மன், ஈரோடு மக்களின், தாயாகவும், காவல் தெய்வமாக விளங்குகிறாள். எந்த வித மன கஷ்டத்துடன் இருந்தாலும் ஒருமுறை பண்ணாரி சென்றுவந்தால், தெளிவும், மனநிறைவு கிடைக்குமாம்.

News February 14, 2025

கைப்பேசி செயலிகள் மூலம் வரி செலுத்த மாநகராட்சி ஏற்பாடு

image

ஈரோடு மாநகராட்சி சொத்து வரி, குடிநீர் கட்டணம் வசூலித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம், மாநகராட்சியின் திட்டப்பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் மக்கள் வசூல் மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால், வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். இந்நிலையில், மாநகராட்சியில் சொத்து வரியை 100% வசூலிக்கும் வகையில் ஜி பே, போன் பே செயலிகள் மூலம் ஏற்பாடுகள் செய்துள்ளது.

News February 13, 2025

ஈரோடு திமுக பொறுப்பாளர்கள் நியமனம்!

image

ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி தொகுதிகளை உள்ளடக்கிய, ஈரோடு தெற்கு திமுக மாவட்ட பொறுப்பாளராக, முத்துசாமியும், பவானி, பெருந்துறை தொகுதிகளை உள்ளடக்கிய, ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளராக, தோப்பு வெங்கடாச்சலமும், அந்தியூர், பவானி சாகர், கோபி தொகுதியை உள்ளடக்கிய ஈரோடு வடக்கு மாவட்ட பொறுப்பாளராக, என்.நல்லசிவமும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

News February 13, 2025

வாய்க்காலில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

image

சித்தோடு, உத்தர பிரதேச மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அலிகஷன் – ருஸ்தாம்சா தம்பதி. இவா்கள்,நசியனூா், சாமிகவுண்டன்பாளையத்தில் தனியார் ஆலையின் குடியிருப்பில் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனா். நேற்று முந்தினம் இரவு வீட்டுக்கு வந்தபோது, வீட்டிலிருந்த ஒன்றரை வயது மகளை காணவில்லை. தேடிப்பாா்த்தபோது வாய்க்கால் தண்ணீரில், குழந்தை சடலமாக மீட்கப்பட்டர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

error: Content is protected !!