India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் தொழிற்பயிற்சிக்கான 4,000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஈரோட்டில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக ரூ.12,000 முதல் ரூ.15,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.11 ஆகும். இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க
ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: மகா சிவராத்திரி விழா புதன்கிழமை (பிப்ரவரி 26) நடைபெற உள்ளது. இதையொட்டி, ஈரோடு மஞ்சள் வர்த்தகத்துக்கு பிப்ரவரி 27 -ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் மஞ்சள் வர்த்தகம் மற்றும் ஏலம் நடைபெறாது. பிப்ரவரி 28- ஆம் தேதி வழக்கம்போல ஏலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் முதல் முறையாக ஈரோட்டில் நேற்று வெயில் சதம் அடித்தது. தமிழகத்தில் பொதுவாக ஏப்., மே தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று ஈரோட்டில் 37.6 டிகிரி செல்சியஸ் அதாவது 100 பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக ஈரோட்டில் வெயில் சதம் அடித்தது குறிப்பிடதக்கது.
ஈரோடு மாவட்டத்தில் பிப் 2025ம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், வரும் 28ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும். காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கோவையில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள்<
ஈரோட்டில் சோலாரில் முதல்வர் மருந்தகம் திறக்கபட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, ராஜ்ய சபா உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி. சந்திரகுமார், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஈரோடு மாநகராட்சி மேயர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஈரோட்டில் நடத்தப்படும் மஞ்சள் சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து மஞ்சள் கொள்முதல் செய்கின்றனர். சனி, ஞாயிற்றுக்கிழமையும், அரசு விடுமுறை நாட்களும் மஞ்சள் சந்தை நடைபெறாது. இந்நிலையில் பிப்.27 சிவராத்திரியை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம், ‘ஆடும், ஓநாயும் ஒன்று சேர முடியாது’ என இபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்’ என்றார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணி திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மேட்டுக்கடை தங்கம் மகாலில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், கே.இ.பிரகாஷ், எம்எல்ஏக்கள் சந்திரகுமார், வெங்கடாசலம், கலெக்டர் ராஜகோபால்சுன்கரா கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா போஸ்டரில் எடப்பாடி பழனிசாமி பெயரை செங்கோட்டையன் தவிர்த்தார். ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் வெளியிட்ட விளம்பரத்தில் எடப்பாடி பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பெயரை செங்கோட்டையன் தவிர்த்தார்.
Sorry, no posts matched your criteria.