India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அஞ்சல் துறையின் ஒரு பகுதியாக செயல்படும் ‘இந்திய அஞ்சல் பேப்மெண்ட் வங்கியில்’ (India Post Payments Bank) உள்ள 51 நிர்வாகி காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக தரப்படும். விண்ணப்பிக்க இங்கே <
கோபி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்தியன் தலைமையிலான காவல்துறையினர் மொடச்சூர் செங்கோட்டையன் காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த செந்தில், சரவணன், சுரேஷ், முருகன், பாலாஜி, மனோகரன், ஆறுமுகம் உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.6,770 பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட ஏரி, குளம், குட்டைகளில் விவசாயிகள், மண் பாண்டம் செய்வோர் வண்டல் மண் எடுக்க அந்தந்த பகுதி வட்டாட்சியரை அணுகி அனுமதி பெறலாம். அனுமதி வழங்கப்பட்டவை தவிர பிற ஏரி, குளம், குட்டைகளில் இருந்து மண் எடுக்க விவசாயிகள் விரும்பினால், உரிய விவரத்துடன் விண்ணப்பித்தால், அரசுக்கு அனுப்பி அனுமதி பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.
ஈரோடு : கோடை வெப்ப தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்பானங்களை தவிர்த்து பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.தண்ணீர், அரிசி கஞ்சி, இளநீர், பழச்சாறு ஆகியவற்றை பருகலாம்.பருவ பருகலாம்.பருவ தர்பூசணி முலாம்பழம் நுங்கு மற்றும் வெள்ளரி ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
அஞ்சல் துறையில் இருக்கும் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தேர்வு கிடையாது. 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் 77 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மார்ச் (3.3.2025). விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்
ஈரோடு, பெரியசெட்டிபாளையம், கணபதி நகரைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (46). 2020 ல் கோவிந்தராஜ் தனது கடையில் வேலை பார்த்த 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சொர்ணகுமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், கோவிந்தராஜுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.
ஈரோடு பவானி சாலை காமராஜ் நகரில் அலாவுதீன் என்பவர் வளர்பிறை என்ற பெயரில் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். நேற்று காலை 6.25 மணியளவில் பர்னிச்சர் ஷெட்டில் மின் கசிவு காரணமாக பழைய மர கட்டை துண்டுகளில் தீப்பிடித்து எரிய துவங்கியது. தகவலறிந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் அங்கு சென்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில் மர பொருட்கள், ப்ளைவுட் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது.
சத்தியமங்கலம் : கோவை முதல் கர்நாடக எல்லை வரையிலான புறவழிச் சாலை 4/6 திட்டத்தால் பாதிப்படையும் விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று பிப்-28 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் தலைமைச் சங்க வளாகத்தில், வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் புறவழிச்சாலை திட்டத்தை எதிர்கொள்வது, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
பெருந்துறை அடுத்த வெள்ளோடு அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சாலையோரம் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. இதில், 150 ஆண்டுகால பழமையான ஆலமரம் ஒன்று பிடுங்கப்பட்டு, மீண்டும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் பகுதியில் நடப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த மரத்தின் அடியில் கடை நடத்தி வந்த பெண் அழுதது, அங்கிருந்தவர்கள் மனதை நெகிழ்வடைய செய்தது.
ஈரோடு மாவட்ட மக்கள் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். சமூக வலைதள பக்கங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். வங்கி கணக்கு மற்றும் ஓடிபி எண்களை யாரிடமும் பகிர வேண்டாம். தெரியாத இணைப்பை கிளிக் செய்யவோ அல்லது மற்றவருக்கு அனுப்பவோ கூடாது என ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் தொடர்புக்கு சைபர் கிரைம் எண்ணான 1930ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.