Erode

News March 21, 2025

ஈரோட்டில் பெண்களுக்கு இலவம்!

image

ஈரோடு அடுத்த சித்தோடு – அரசினர் பொறியியல் கல்லூரி பகுதியில், கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், பெண்களுக்கான அழகுக்கலை இலவச பயிற்சி வகுப்பு ஏப்ரல் 2 முதல் மே 10 வரை நடைபெற உள்ளது. இதில் பயிற்சி, சீருடை உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். விருப்பம் உள்ள நபர்கள் 0424 2400338, 8778323213, 7200650604 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News March 21, 2025

ரவுடி ஜான் கொலையில் பரபரப்பு தகவல்

image

சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரவுடி ஜான் என்கிற சாணக்கியா மீது சேலம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி போன்ற குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு கிச்சிப்பாளையத்தை சேர்ந்த செல்லத்துரையை ஜான் கொலை செய்துள்ளார். எனவே செல்லதுரை கொலைக்கு பழி தீர்ப்பதற்காக ஜானை கும்பல் வெட்டி சாய்த்து இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2025

ஈரோட்டில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே நகரின் சில பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக, பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

News March 21, 2025

பண்ணாரியம்மன் கதை தெரியுமா மக்களே?

image

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் உள்ள மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாகும். அக்காலத்தில், அங்கு மேய்க்கப்படும் காராம்பசு ஒன்று தினந்தோறும் பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்கு புற்கள் சூழ்ந்த சுயம்பு லிங்கத் திருவுருவம் மீது தன்னிச்சையாக சுரந்துள்ளது. அப்போது அங்கிருந்த ஒருவருக்கு தெய்வ அருள் வந்து பண்ணாரி அம்மன் அங்கு இருப்பதாக வாக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. (ஷேர்)

News March 21, 2025

ஈரோடு தலைமை அஞ்சல் நிலையத்தில் (e-KYC) அறிமுகம்

image

ஈரோடு, அஞ்சல் துறை மூலம் சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகின்றன. தற்போது தொழில் நுட்ப மேம்பாட்டை பயன்படுத்தி, படிவம் இன்றி எளிமையாக பரிவர்த்தனை மேற்கொள்ள, ஆதார் அடிப்படையிலான அங்கீகார செயல்முறை (e-KYC) பரிவர்த்தனை திட்டம் அறிமுகமாகி உள்ளது. இவ்வசதி, ஈரோடு கோட்டத்தில் உள்ள ஈரோடு, பவானி, கோபி தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

News March 21, 2025

போர்வையில் கிரிக்கெட் வீரர்கள் உருவம் செய்து அசத்தல்

image

சென்னிமலை, சென்டெக்ஸ் கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் துணி வடிவமைப்பாளராக பணிபுரியும் அப்புசாமி அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் நிகழ்வுகளையும், முக்கிய பிரமுகர்களையும் நெசவில் போர்வைகளாக உருவாக்கி வருகிறார். அவ்வகையில்  உலக கோப்பை-2025-ல் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாகவும் ரோகித், கோலி ஆகியோர் உருவங்களை இணைத்தும், ஐபிஎல் -2025 ஐ வரவேற்கும் விதமாகவும் போர்வை நெசவு செய்துள்ளார்.

News March 20, 2025

ஈரோடு பெயர் காரணம் உங்களுக்கு தெரியுமா

image

ஈரோட்டிற்கு எதனால் ஈரோடு என பெயர் வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா. ஈரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஆர்த்ரா கபாலிஸ்வர் கோவிலே ஈரோட்டிற்கு ஈரோடு என பெயர் வரக் காரணம். ஆர்த்ரம் என்றால் ஈரம் என்றும், கபாலம் என்பது மண்டை ஓடு என்றும் பொருள். ஈரம் சொட்டும் ஓட்டை கையில் வைத்திருக்கும் கடவுளின் உடைய ஊரே ஈரோடு என பெயர் பெற்றது. SHARE பண்ணுங்க மக்களே

News March 20, 2025

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 119 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்.,21ஆம் தேதி வரை <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 20, 2025

ஈரோட்டிற்கு வந்த நெல் மூட்டைகள்

image

ஈரோடு மாவட்ட பொது விநியோக திட்டத்திற்காக, மயிலாடுதுறையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில், 2,000 டன் நெல் மூட்டைகள்  ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டிற்கு வந்தடைந்தது. அதனை சுமைதூக்கும் தொழிலாளர்கள் லாரியில் ஏற்றப்பட்டு, ஈரோடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் அதிகாரிகள் கூறினார்.

News March 20, 2025

ஈரோடு: மகன் இறந்த சோகத்தில் தாய் தற்கொலை!

image

ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற +2 தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இதனால் மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த செல்லத்துரையின் தாய் அனுஷா, சரிவர சாப்பிடாமல், உடல்நல குறைவு ஏற்பட்டு, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 

error: Content is protected !!