Erode

News March 5, 2025

ஈரோட்டில் உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு

image

ஈரோட்டில் உள்ள உணவகங்களில் இட்லி தயாரிப்பின்போது பிளாஸ்டிக் தாள் பயன்படுத்தப்படுகிறதா என உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். இட்லி தயாரிப்பின்போது துணிக்கு பதில் பிளாஸ்டிக் தாள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வந்தன. இதனை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கருங்கல்பாளையம் இட்லி கடை, ஹோட்டல்கள், சிற்றுண்டி போன்ற இடங்களில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

News March 5, 2025

ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் மார்ச் மாதம் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொள்ளலாம். இதில் பங்குபெற முன்பதிவு அவசியம். மேலும், தொடர்புக்கு 86754 12356 என்ற எண்ணை அழைக்கவும். 

News March 5, 2025

இலவச பயிற்சி! மிஸ் பண்ணிடாதீங்க 

image

சித்தோடு, வாசவி கல்லூரி அருகே கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பயிற்சியானது வரும் 10ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இங்கு மசாலா பொடிகள், அப்பளம், ஊறுகாய் தயாரிக்க இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.மேலும், விவரங்களுக்கு 0424-2400338, 87783 23213, 72006 50604 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

News March 4, 2025

ஈரோடு: காவலர் தற்கொலை

image

ஈரோடு, ஆயுதப் படையில் காவலராக நவீன்குமாா்(35) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், ஈரோடு அடுத்த ஆணைக்கல்பாளையம் காவலா் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில், நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த ஈரோடு தாலுகா போலீசார், காவலர் நவீன்குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News March 4, 2025

ஈரோட்டில் 108 தேர்வு மையங்கள்

image

தமிழ்நாடு முழுவதும் +1 பொதுத்தேர்வு நாளை 5 ம் தேதி தொடங்கி வருகிற 27 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வினை ஈரோடு மாவட்டத்தில் 23,258 மாணவ மாணவிகளும், தனித்தேர்வர்களும் எழுத உள்ளனர். இவர்கள் தேர்வு எழுத 108 தேர்வு மையங்கள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

News March 4, 2025

ஈரோடு: கோடையை சமாளிக்க பருத்தி ஆடை 

image

ஈரோட்டில் தற்போது இருந்து வெயில் அதிகரித்து காணப்படுகிறது. இன்று அதிகபட்ச வெப்பநிலை 32.19 செல்சியஸாக பதிவானது. குறைந்தபட்ச வெப்பநிலை 24.53 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. எனவே கோடை வெப்ப அலைகளால் வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிர்பானங்களைத் தவிர்த்து, பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், என ஈரோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 4, 2025

ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் மார்ச் 15 காலை 8.00 மணி முதல் மாலை 4 மணி வரை, ரங்கம்பாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேபட்ட  நிறுவனங்களில் மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ள. இதில் 8ஆம் வகுப்பு முதல் டிகிரி,டிப்ளமோ, நர்சிங் முடித்தவர்கள் என அனைவரும் பங்கு பெறலாம். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 4, 2025

ஈரோடு: பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு

image

ஈரோடு, குமலன்குட்டை, செல்லபண்ணகவுண்டா் வீதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(52). இவரது மனைவி சித்ரா (43). பெருந்துறையில் நடைபெற்ற உறவினா் இல்ல திருமண விழாவுக்கு 2ம் தேதி சென்று கொண்டிருந்துள்ளனா். அப்போது தொடர்ந்து ஹெல்மட் அணிந்த இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் சித்ராவின் 5 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார்.

News March 3, 2025

ஈரோட்டில் 250 பேர் வாகன உரிமம் ரத்து

image

ஈரோடு, ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதன்படி, கடந்த இரு மாதங்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் இயக்கியதாக, 250 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து, இவர்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News March 3, 2025

ஈரோடு போஸ்ட் ஆபீஸில் வேலை..இன்றே கடைசி நாள்

image

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஈரோட்டில் மட்டும் 77 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.10,000 முதல் 29ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசிநாளாகும். விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்

error: Content is protected !!