Erode

News August 7, 2024

ஈரோட்டில் மழைக்கு வாய்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே ஈரோட்டில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோட்டில் 2செமீ மழை பெய்து இருப்பது குறிப்பிடதக்கது.

News August 7, 2024

ஈரோடு: கருணாநிதியின் முழு உருவ சிலைக்கு மரியாதை

image

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி கோபி அருகே கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள கருணாநிதி முழு உருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் எம்எல்ஏ வெங்கடாச்சலம், ஒன்றிய செயலாளர் சிவபாலன் உட்பட மாநில, மாவட்ட, நகர,பேரூர், ஒன்றிய கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News August 7, 2024

அந்தியூரில் போக்குவரத்து மாற்றம்: வரைபடம்

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசாமி கோயில் பண்டிகை இன்று துவங்கி வரும் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வருவர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவல்துறை போக்குவரத்து மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளனர். அதன் வரைபடத்தை வெளியிட்டுள்ளனர்.

News August 7, 2024

உதயநிதி ஈரோடு திமுக நிர்வாகிகளை புறக்கணித்தாரா?

image

ஈரோடு திமுக நிர்வாகிகளை சந்திக்காமல் உதயநிதி ஸ்டாலின் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடுக்கு அண்மையில் வந்த உதயநிதியை வரவேற்க திமுகவினர் கடந்த 1ஆம் தேதி இரவு கருமாண்டம்பாளையம் பகுதியில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களை சந்திக்காமல் உதயநிதி சென்று விட்டதாகவும், இதேபோல் 2ஆம் தேதி கெஸ்ட் அவுசிற்கு வந்த நிர்வாகிகளையும் சந்திக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

News August 7, 2024

ஈரோடு ரேஷன் அட்டை தாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில், பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் ஆகஸ்ட்10ஆம் தேதி அனைத்து வட்டங்களிலும் தலா ஒரு இடத்தில் நடைபெற உள்ளது. இதில் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் – நீக்கம், செல்போன் எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை மனுவாக அளித்து பொதுமக்கள் பயன்பெறலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News August 6, 2024

ஈரோடு கலெக்டர் அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில், ஊரக பகுதி பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் 2016-17 முதல் 2021-22 வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகள் மற்றும் ஆவணங்களை சமூக தணிக்கை மேற்கொண்டு சமூக தணிக்கை வரும் 9ஆம் தேதி நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் 13 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை நடைபெற உள்ளது. அதற்கான இடம், நேரம் தொடர்புடைய கிராம ஊராட்சி மூலம் அறிவிக்கப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

ஈரோடு தெற்கு மாவட்ட திமுகவினருக்கு அழைப்பு

image

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை (ஆகஸ்டு.8) காலை 8 மணிக்கு ஈரோடு – பி.எஸ்.,பார்க் மற்றும் முனிசிபல் காலனியில் உள்ள கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தப்பட உள்ளது. எனவே இந்நிகழ்வில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுகவினர் பங்கேற்க வேண்டும் என ஈரோடு தெற்கு மாவட்ட திமுக., செயலாளரும் அமைச்சருமான சு.முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94.93 அடியாக அதிகரிப்பு

image

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 94.93 அடியாக அதிகரித்து உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 150 கன அடியும் என மொத்தம் 1,055 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

News August 6, 2024

ஈரோட்டில் நாளை முதல் சிறப்பு விற்பனை: முந்துங்க!

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஈரோடு மாவட்ட கைத்தறி துறை சார்பில் நாளை (ஆகஸ்ட் 7) மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 8) சிறப்பு கைத்தறி கண்காட்சி விற்பனை நடக்கிறது. இதில் நெசவாளர்களுக்கு இ-முத்ரா கடன் தொகை, மானியத்துடன் கூடிய வீடு கட்ட பணி ஆணை, ஓய்வூதிய திட்டம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட தொகை வழங்குதல் ஆகியவை நடைபெற உள்ளது.

News August 6, 2024

அந்தியூரில் 700 போலீசார் பலத்த பாதுகாப்பு

image

அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோவில் நடப்பாண்டு ஆடி தேர்த்திருவிழா நாளை முதல் 10ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த தேரோட்டத்திற்கு பல லட்சக்கணக்கான மக்கள் வருவர். எனவே திருவிழா பாதுகாப்பு பணிக்கு ஏடிஎஸ்பி தலைமையில், மூன்று டிஎஸ்பிக்கள், ஆறு இன்ஸ்பெக்டர்கள், உள்ளூர் மற்றும் ஆயுதப்படை போலீசார், ஊர்காவல் படையினர் என 700 பேர் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!