India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2914 கனஅடியில் இருந்து 6532 கனஅடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.43 அடியாக உயர்ந்துள்ளது. குடிநீருக்காகவும் பாசனத்துக்காகவும் பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1005 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 19 பவானிசாகர் அணை 70வது ஆண்டு நிறைவுசெய்கிறது.
கோபி தாலுகா, கெட்டிச்செவியூர் துணை மின் நிலைய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 9) மின் பராமரிப்பு நடைபெற உள்ளது. எனவே கீழ்காணும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை: கெட்டிச்செவியூர், சுள்ளிக்கரடு, தோரனவாவி, தண்ணீர்பந்தல்பாளையம், லட்சுமிமாய்புதூர், வாக்கரைபுதூர், நீலாம்பாளையம், நல்லக்காபாளையம், வடக்குபாளையம், ராசாகவுண்டன்பாளையம்.
பவானி அடுத்த கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஆகஸ்டு 10 (சனிக்கிழமை), பழநி – தண்டாயுபாணி (முருகன்) கோவில் நிர்வாகம் சார்பில் நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. எனவே அன்று காலை 11 மணிக்கு சுற்றுவட்டார பகுதி நாட்டுச்சர்க்கரை உற்பத்தியாளர்கள், நாட்டு சர்க்கரை தரம் பிரித்து கொண்டு வந்து விற்று பயனடையலாம் என ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் (99445-23556) தெரிவித்துள்ளார்.
ஈரோடு, சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று ஆய்வு மேற்கொண்டார். இதில் விண்ணப்பள்ளி ஊராட்சியில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப்பணி, இராமபயலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பள்ளி சிக்கரசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய 2 இடங்களில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) உள்ளன. இதில் நடப்பாண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் ஆகஸ்டு 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. எனவே, மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
மாநில அளவிலான எறிபந்து போட்டி ஈரோட்டில் 2 நாட்கள் நடந்தது. இதில் ஈரோடு, திருப்பூர், கோவை, சென்னை, கரூர், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில், 24 அணிகள், பெண்கள் பிரிவில், 23 அணிகள் கலந்து கொண்டன. ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில், கரூர் அணி தொடர்ந்து 5வது முறையாக வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இரண்டாம் இடத்தை ஈரோடு அணி பெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஆக.8) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்தடை ஏற்படும். அவை: திங்களூர், கல்லாகுளம், வேட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டகவுண்டன்பாளையம், சுங்கக்காரன்பாளையம், சினாபுரம் மேற்கு பக்கம் மட்டும், மேட்டூர். ஷேர் பண்ணுங்க!
மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வருகின்ற 15ஆம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடுவது பற்றிய அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர் சதீஷ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஈரோடு மாவட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வருகின்ற 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அவற்றின் கொண்டாடுவது பற்றிய அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் திட்ட இயக்குனர் சதீஷ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.