India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாநகராட்சி நகர்புற சுகாதார நிலையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான மருந்தாளுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இதற்கு கல்வி சான்று நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை வரும் 24ஆம் தேதிக்குள் ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு ஆட்சியர் அலுவலக துணை மின் நிலையம் மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (செப்.11) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பின்வரும் பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அவை: காந்திநகர், பழனியப்பா வீதி, ஈ.பி.காலனி, பெருந்துறை சாலை, பாலசுப்பிரமணியன் நகர், சின்னமுத்து வீதி. எனவே துமக்கள் அதற்கேற்றாற்போல் தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னிமலை அடுத்துள்ள அர்த்தனாரி பாளையத்தில் வீட்டில் இருந்த ரம்யா என்பவரை 3 முகமூடிக் கொள்ளையர்கள் புகுந்து கட்டிப் போட்டுவிட்டு வீட்டிலிருந்து ரூ. 3 லட்சம் கொள்ளையடித்து சென்றதாக தம்பி கோகுல கிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் ரம்யா கடன் பிரச்சனையால் பணத்தை எடுத்துக்கொண்டு முகமூடிக் கொள்ளையர்கள் புகுந்ததாக நாடகமாடியது தெரியவந்தது. இது தொடர்ந்து ரம்யாவை போலீசார் கைது செய்தனர்.
மொடக்குறிச்சி தோட்டக்கலை துறை சார்பில், சென்னிமலை வனச்சரக நாற்று பண்ணையிலிருந்து தேக்கு மற்றும் மகாகனி மரக்கன்றுகளை தோப்பாக வைக்க விரும்பும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் தோட்டக்கலைத் துறையை தொடர்புகொள்ளலாம் என தோட்டக்கலை உதவி இயக்குநர் பா. சிந்தியா 9787045557 அறிவித்துள்ளார். தேவைப்படும் விவசாயிகள் ஆதார் அட்டை ,பட்டா நகல் தேவை.
உலகில் நாளுக்கு நாள் புது புது மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அதன்படி, தற்போது சைபர் குற்றவாளிகளின் புதிய மோசடியாக, 50 ஜிபி இலவச டேட்டா தருவதாக, லிங்க் அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இந்த லிங்கை தொட்டால் தங்கள் வங்கியில் இருந்து பணம் திருடப்படும் வாய்ப்புள்ளது. எனவே மக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், சைபர் கிரைம் உதவிக்கு 1930 எண்ணை அழைக்கலாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு அருகே குமலன்குட்டையில், இந்து முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், ஸ்ரீ விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் திருவுருவ சிலை நேற்று மாலை திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி சுவாமி தரிசனம் செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் சூரம்பட்டி கிழக்கு மண்டல் தலைவர் நிர்மல் உட்பட கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் வசித்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக ஈரோடு மாவட்டத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்) பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை பெற விரும்பினால், புதிய குடும்ப அட்டை கோரி e-shram வலைதளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இதனை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சத்தியமங்கலத்தில் இருந்து கேர்மாளத்திக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல கேர்மாளத்தில் இருந்து சத்தியமங்கலத்திற்கு பயணிகளை ஏற்றுகொண்டு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இன்று மாலை வைத்தியநாதபுரம் அருகே 2 பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்து முன் பக்க கண்ணாடி உடைந்து சேதாரமானது.
ஈரோடு மாவட்டம் நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, செல்வராஜ் எம்பி, அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ, வங்கி அதிகாரிகள்ஸ மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.
ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் கலைமகள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 மையங்களில், யுபிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படிப்போருக்கு நான் முதல்வன் மதிப்பீட்டு தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வினை எழுத 658 பேர் விண்ணப்பித்த நிலையில், 434 பேர் தேர்வு எழுதினர். 224 பேர் தேர்வு எழுத வரவில்லை. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் 1,000 பேரை தேர்வு செய்து மாதம் ரூ7,500 வீதம் 10 மாதங்கள் வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.