Erode

News September 16, 2024

ஈரோட்டுக்கு இன்று HAPPY BIRTHDAY

image

ஈரோடு நகர பரிபாலன சபை செப்டம்பர் 16, 1871 அன்று உருவாக்கப்பட்டது. எனவே ஆண்டுதோறும் செப்டம்பர் 16ஆம் தேதியை ஈரோடு மாவட்ட மக்கள் ஈரோடு தினமாக கொண்டாடி வருகிறார்கள். அதன்படி இன்று (செப்.16) ஈரோடு தினமாக கொண்டாடப்படுகிறது. ஈரோடு நகரத்திற்கு 152 ஆண்டுகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று 153வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.

News September 15, 2024

ஈரோட்டில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤ ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது. ➤ ஈரோட்டில் 6 மாதங்களில் காச நோயால் 164 பேர் பாதிப்படைந்துள்ளனர். ➤ நீடாமங்கலத்தில் இருந்து 21 சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் ஈரோட்டிற்கு 1000 டன் நெல் கொண்டு வரப்பட்டது. ➤ஈரோட்டில் அண்ணா சிலைக்கு முக்கிய தலைவர்வகள் மரியாதை செலுத்தினர்.

News September 15, 2024

தொழிற்சங்க கொடியேற்றி Ex.அமைச்சர் உரை

image

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரமான கே.ஏ.செங்கோட்டையன், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா மற்றும் தொழிற்சங்க 50ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இன்று கோபி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பணிமனையில் கொடியேற்றி இனிப்புகளை வழங்கி உரையாற்றினார். இதில் ஏராளமான தொழிற் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

News September 15, 2024

ஈரோட்டிற்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட அரிசி

image

இன்று பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நீடா மங்கலத்தில் இருந்து 21 சரக்கு ரெயில்கள் பெட்டிகள் மூலம் ஆயிரம் டன் நெல் கொண்டுவரப்பட்டது. ஈரோடு ரெயில் பணிமனையில் நெல் மூட்டைகள் இறக்கப்பட்டு நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் அரசு குடோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர் அங்கிருந்து அரிசி அரவைக்கு கொண்டு செல்லப்பட்டு அரிசி ஆக்கப்பட்டு பொது விநியோக திட்டத்தின் மூலம் அனுப்பப்பட உள்ளது.

News September 15, 2024

6 மாதங்களில் காசநோயால் 164 பேர் உயிரிழப்பு

image

ஈரோட்டில் கடந்த 6 மாதத்தில் காசநோயால் 164 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மைக்ரோ பாக்டிரியம் டியூபர்குளோசிஸ் என்ற கிருமியால் காசநோய் பரவுகிறது. இது குழந்தை முதல் முதியவர்கள வரை அனைவரையும் தாக்ககூடியது. இதுவரை காசநோய் பாதிப்பு இருந்த 1,693 பேர் குணமடைந்தும், 164 பேர் உயிரிழந்துள்ளனர்.

News September 15, 2024

ஈரோட்டில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம்

image

ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 2024 -2025ம் ஆண்டுக்கான காரிப் பயிர் காப்பீடு திட்டம் செய்துகொள்ளுமாறு ஈரோடு அனைத்து வருவாய் கிராம விவசாயிகள் பயன் பெற்றுக்கொள்ளுமாறு ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார். அருகில் உள்ள இ-சேவை மையம் மற்றும் வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம், மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை மையத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News September 15, 2024

ஈரோட்டுக்கு என்ன வயசு தெரியுமா மக்களே?

image

ஈரோடு நகர பரிபாலன சபை செப்டம்பர் 16, 1871 அன்று உருவாக்கப்பட்டது. எனவே ஆண்டுதோறும் செப்டம்பர் 16ஆம் தேதியை ஈரோடு மாவட்ட மக்கள் ஈரோடு தினமாக கொண்டாடி வருகிறார்கள். அதன்படி நாளை (செப்.16) ஈரோடு தினமாக கொண்டாடப்பட உள்ளது. ஈரோடு நகரத்திற்கு 152 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்தது. நாளை 153வது ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ளது.

News September 15, 2024

ஈரோடு: இங்கு மது, புகை பிடிக்க கூடாது

image

ஈரோடு, அம்மாபேட்டை பகுதியில் பாலமலை உள்ளது. இந்த மலை சேலம் மாவட்டம், மேட்டூர் வனசரகத்திற்கு உட்பட்டது. இந்நிலையில், இம்மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பக்தர்கள் வருவது வழக்கம். எனவே மலை ஏறும் பக்தர்கள் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையவோ, மது அருந்தவோ, புகை பிடிக்கவோ, குப்பைகளை போடவோ கூடாது என வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

News September 15, 2024

ஈரோட்டில் இவ்வளவு பேர் ஆப்சென்ட்டா?

image

தமிழ்நாட்டில் குரூப் 2 தேர்வு இன்று நடைபெற்றது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 25,475 பேர் குரூப் 2 தேர்வு விண்ணப்பித்திருந்தனர். இதில் 18,943 பேர் தேர்வு எழுதினர். 6,532 பேர் தேர் எழுத வரவில்லை. மேலும் ஈரோடு – தெற்குப்பள்ளம், தி பாரதி வித்யா பவன் பள்ளியில் நடைபெற்ற குரூப் 2 தேர்வினை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

News September 14, 2024

ஈரோட்டில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤தாளவாடியில் சாலையில் சென்று கொண்டு இருந்த வாகன ஓட்டிகளை யானை துரத்தியதால், நுழையில் 2 பேர் உயிர் தப்பினர். ➤ஈரோட்டில் டாஸ்மாக் கடைக்கு வரும் 17ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர். ➤ஈரோட்டில் குருப் 2 தேர்வு நடைபெற்றது. இதில் தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ➤சென்னிமலையில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

error: Content is protected !!