Erode

News September 22, 2024

T Shirt ரூ.50க்கு விற்பனை: குவிந்த கூட்டம்

image

ஈரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுனிக்கடையில் T Shirt ரூ.50-க்கு விற்பனை என்ற அறிவிப்பால் கடை முன் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், அப்பகுதியில் திரளான இளைஞர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார், ஜவுளி விற்பனையை நிறுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

News September 22, 2024

வீடு வாடகைக்கு கேட்க வந்த பெண் செய்த சம்பவம்

image

ஈரோடு, மூலப்பாளையம் எல்ஐசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேரி ஸ்டெல்லா. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் மாடியில் உள்ள வீட்டை வாடகைக்கு விடுவதாக அறிவித்திருந்தார். இதைகண்ட பெண் ஒருவர் வீடு பார்க்க வருவது போல நடித்து, மேரி ஸ்டெல்லா மீது மிளகாய் பொடியை தூவி, நகையை பறிக்க முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன், அப்பெண்ணை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

News September 22, 2024

ஈரோடு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து

image

அந்தியூர் அருகே வெள்ளி திருப்பூர் ஆலயங்கரடு பகுதியில்
கூலி வேலைக்கு மினி ஆட்டோவில் ஆட்களை ஏற்றி சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 16 பேர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News September 21, 2024

ஈரோடு அருகே வெளுத்து வாங்கும் மழை

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை 3:30 மணிக்கு மேல் திடீரென தூரல் மழை பெய்தது. தொடர்ந்து ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளான மேட்டுக்கடை, வேப்பம்பாளையம், நஞ்சனாபுரம், சாணார்பாளையம், ராயபாளையம் ஆகிய பகுதிகளில் தற்போது வெயிலுடன் கூடிய மிதமான மழை கடந்த 15 நிமிடங்களாக பெய்து வருகிறது.

News September 21, 2024

ஈரோட்டில் ‘செப்.23’ மிஸ் பண்ணிடாதீங்க!

image

ஈரோட்டில், மேட்டூர் சாலையில் உள்ள ஜெம் & ஜூவல்லரி டெக்னாலஜி பயிற்சி மையத்தில், திறன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சார்பில் செப்டம்பர் 23ஆம் தேதி தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் ஆண்/பெண் இருவரும் பங்கேற்கலாம் என திறன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

News September 21, 2024

ஈரோட்டில் வேலைவாய்ப்பு: கலெக்டர் தகவல்

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு
சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் செப்டம்பர் 24ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதில் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடயலாம். மேலும் தகவலுக்கு 94999-33475 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News September 20, 2024

ஈரோடு போலீசார் எச்சரிக்கை

image

உலகில் தற்போது சைபர் குற்றங்கள் புதிய மோசடியாக உருவெடுத்துள்ளது. கே.ஓய்.சி., அப்டேட் அல்லது கிரெடிட் கார்டு புதுப்பித்தல் என்ற பெயரில் வரும் அழைப்புகளை நம்ப வேண்டாம். தங்கள் தனிப்பட்ட விபரங்களை யாரிடமும் அளிக்க வேண்டாம். இதனால் தங்களின் பணம் திருடு போக வாய்ப்புள்ளது. மேலும் சைபர் கிரைம் குற்றங்களை தெரிவிக்க உதவிக்கு 1930 எண்ணை அழைக்கலாம் என ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

News September 20, 2024

ஈரோட்டில் ரீல்ஸ் போட எதிர்ப்பு: காதல் மனைவி மாயம்

image

வெள்ளோடு அடுத்துள்ள தண்ணீர்பந்தலைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரும் சேலம் ஏற்காடு பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தம்பதிக்கு 3 குழந்தைகள். கார்த்திகா இன்ஸ்டா மூலம் ரீல்ஸ் வெளியிட்டுவந்தார். இதற்கு லைக், கமெண்ட்களும் அதிகரித்ததால் தினமும் ரீல்ஸ் போட ஆரம்பித்தார். இதை கணவர் கண்டித்ததால் குழந்தையுடன் மாயமானார். புகாரின்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 20, 2024

ஈரோடு: 11 கைதிகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு

image

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாக மருத்துவக் குழுவினர் ஈரோடு கிளைச் சிறையில் கைதிகளுக்கு மருத்துவ சோதனை நடத்தினர். 50 கைதிகளுக்கு மேல் உள்ள ஈரோடு சிறையில் 11 கைதிகளுக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்தது. அவர்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

News September 20, 2024

ஈரோடு அருகே டிப்பர் லாரி மோதி தொழிலாளி பலி

image

விஜயமங்கலம் புலவர்பாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் (37) என்பவர் பவர்லூம் தறிப்பட்டறை நடத்தி வந்தார், இவரது தம்பி தமிழ்ச்செல்வன். இவர்கள் இருவரும் நேற்று பெருந்துறைக்கு பைக்கில் வந்துவிட்டு ஊருக்கு திரும்பும் வழியில் சீனாபுரம் துடுப்பதி பிரிவு அருகே முன்னாள் சென்ற பஸ்ஸை முந்த முயன்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் இருவரும் காயம் அடைந்தனர். இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

error: Content is protected !!