India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இதை ஒட்டியும், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ஈரோடு முக்கிய வீதிகளான ஆர்.கே.வி.ரோடு, பார்க் சாலை, மணிக்கூண்டு போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. போக்குவரத்து காவல் துறையினர் வாகனங்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கி போக்குவரத்தை சீர் செய்தனர்.
ஈரோடு மாநகரில் கடந்த 11ஆம் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பூஜை முடிந்து பூக்கள், வாழை மரக்கன்றுகள், பூஜைக்காக சுத்தம் செய்யப்பட்ட தேவையில்லாத கழிவு பொருள்களை சாலையோரங்களிலும், வீதிகளிலும் பொதுமக்கள் வீசியிருந்தனர். அதனை சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர், ஒரே நாளில் 300 டன் அளவு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறை முடிந்து நாளை (அக்.14) மீண்டும் மக்கள் பணிக்கும், மாணவர்கள் பள்ளி-கல்லூரிக்கும் செல்ல வேண்டும். எனவே விடுமுறைக்கு சொந்த ஊரான ஈரோடு வந்த மக்கள் திரும்ப வெளியூர் பணிக்கும், வெளியூர் சென்ற நபர்கள் இன்று மாலை ஈரோடு வந்தனர். இதனால் ஈரோடு பேருந்து மற்றும் இரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
சென்னிமலை வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் இலவச மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்படுகிறது, வேம்பு, மகேகனி, அரசமரம், சவுக்கு, செம்மரம் போன்ற மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது, நீ வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேளாண் அலுவலர் வேலுமணி -7598002919.
பெருந்துறை பகுதியில் பணிக்கம்பாளையம் ஏரியாவில் வட மாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் வங்காளதேசத்தினர் உரிய ஆவணங்கள் இன்றி பாஸ்போர்ட், விசா மற்றும் ஆதார் இல்லாமல் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோர்ட் உத்தரவுப்படி சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெருந்துறை பகுதியில் பணிக்கம்பாளையம் ஏரியாவில் வட மாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் வங்காளதேசத்தினர் உரிய ஆவணங்கள் இன்றி பாஸ்போர்ட், விசா மற்றும் ஆதார் இல்லாமல் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோர்ட் உத்தரவுப்படி சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளா்களுக்கு போனஸ் வழங்கக் கோரி ஈரோடு மாவட்ட மருத்துவத் துறை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.சின்னசாமி, முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், அரசு மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் சுமார் 30,000 ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ், கருணைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (அக்.14) திங்கட்கிழமை மாலை 5 மணியளவில், மேட்டுக்கடை, தங்கம் மஹாலில் நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ் தலைமை வகிக்கிறார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திமுக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், அமைச்சருமான சு.முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
பவானி காளிங்கராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (24). இவர் சித்தோடு ரிங் ரோடு பகுதியில் நேற்று ரோட்டை கடக்க முயன்றார். அப்பொழுது சிறுவன் ஒருவர் ஓட்டிவந்த பைக் மோதியதில் வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பெருந்துறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கோபி வரப்பள்ளம் பெருமகைபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன், மனைவி ஈஸ்வரி. இவர்கள் கூலிவேலை பார்த்து வந்தனர். சில நாட்களுக்கு ஈஸ்வரியின் தந்தை கபாலசாமி இறந்துவிட்டார். இதனால் நீண்ட நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஈஸ்வரி தூக்கு மாட்டிக் கொண்டார். அவரை பரிசோதித்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.