Erode

News October 17, 2024

கொடிவேரி அணைக்கு செல்ல 3ஆவது நாளாக தடை

image

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இன்று (17.10.2024) பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இன்று (17.10.2024) சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கட்டில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 17, 2024

ஈரோடு: பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி

image

ஈரோடு, கொல்லம்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பு வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 0424-2400338, 8778323213, 7200650604 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2024

டெக்ஸ்வேலியில் தீபாவளி சிறப்பு விற்பனை

image

ஈரோடு, கங்காபுரம் – டெக்ஸ்வேலி ஜவுளி விற்பனையின் ஒருங்கிணைந்த வளாகம் உள்ளது. இங்கு தீபாவளியை முன்னிட்டு ‘பிக் தீபாவளி பிக் டெக்ஸ்வேலி’ என்ற தீபாவளி விற்பனை தொடங்கியுள்ளது. இதில் அக்.2 முதல் 31 வரை டெக்ஸ்வேலி வரும் அனைவருக்கும் கூப்பன் வழங்கப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு, 10 பேர் என்ற அடிப்படையில் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் டெக்ஸ்வேலி வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2024

ஈரோட்டில் தக்காளி விலை உயர்வு

image

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி, தாராபுரம், தர்மபுரி, ஓசூர் ஆகிய ஊரிலிருந்தும், கர்நாடகா மாநிலத்திலிருந்து தக்காளிகள் விற்பனைக்கு வருகின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் ஈரோடு தினசரி மார்க்கெட்டின் தக்காளி கிலோ 80-க்கு விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News October 16, 2024

பட்டாசு கடை அமைக்க 236 பேர் விண்ணப்பம்

image

ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை அமைக்க, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவந்துள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 236 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 93 விண்ணப்பங்களை தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்து ஆர்.டி.ஓ.,வுக்கு அனுப்பியுள்ளனர். மீதியுள்ள விண்ணப்பங்கள் ஓரிரு நாட்களுக்குள் ஆய்வு செய்து அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2024

சென்னிமலை அருகே சிறுத்தை நடமாட்டமா?

image

சென்னிமலை அருகே மர்ம விலங்கின் கால் தடம் ஆட்டுப்பட்டி அருகே பதிந்துள்ளதால் சிறுத்தை நடமாட்டமா? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் சென்னிமலை அடுத்துள்ள சில்லாங்காட்டு வலசு குட்ட காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் குமாரசாமி விவசாயியான இவரது தோட்டத்தில் ஆட்டுப்பட்டி அருகே மர்ம விலங்கின் கால் தடம் பதிந்துள்ளது.இதை வனத்துறையினர் ஆய்வு செய்து சென்றனர்.

News October 16, 2024

ஈரோட்டில் அமைச்சர் நேரில் ஆய்வு

image

ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் ஈரோடு மாநகரம் 44வது வார்டு புதுமை காலனி, நாடார் மேடு பகுதிகளில் மலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று கால்வாய்கள் தூர்வாரும் பணியினை பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி கமிஷனர் , ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் ,உடன் சென்றனர்.

News October 16, 2024

கன மழையால் ஈரோடு வரும் ரயில் ரத்து!

image

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை – பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி இரயில் நிலையம் இடையே தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. எனவே சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்ல இருந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் இரயில் ரத்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News October 16, 2024

ஈரோடு மக்களுக்கு மழை பற்றிய அறிவிப்பு

image

ஈரோடு மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு, மழை வெள்ளம், தொடர்பான புகார்களை தெரிவிக்க 1077/0420-2260211 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அலர்ட் என்ற செயலி மூலம் வானிலை பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். மேலும் வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்த தகவல்களும் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News October 16, 2024

பொதுவினியோக திட்டத்திற்கு 2,000 டன் நெல் வருகை

image

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்ட பொது விநியோக திட்டத்திற்காக 2,000 டன் நெல் மூட்டைகள் தனி சரக்கு ரயிலில் ஈரோடு இரயில்வே கூட்ஸ் செட்டிற்கு நேற்று வந்தடைந்து. இதனை சுமைதூக்கும் லாரிகளில் ஏற்றி நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நெல் மூட்டைகள் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!