Erode

News September 26, 2024

அஞ்சல் அலுவலகங்களில் விபத்து காப்பீட்டு சிறப்பு முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் விபத்து காப்பீட்டுத் திட்டம் குறித்து 3 நாள் சிறப்பு முகாம் வியாழக்கிழமை (செப்.26) தொடங்குகிறது. தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகை தொழிற்சாலைகள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு மொத்தமாகவும் காப்பீடு பெறலாம். பணிபுரியும் அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைத்து விபத்துக் காப்பீடு பெறும் வசதி செய்யப்படும்.

News September 26, 2024

ஈரோட்டில் இலவச செல்போன் பழுது நீக்குதல் பயிற்சி

image

ஈரோடு, கொல்லம்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், செப்.30ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை இலவச செல்போன் பழுது நீக்குதல் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள நபர்கள் 0424-2400338, 8778323213, 7200650604 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News September 26, 2024

3 நாள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை

image

ஈரோடு, பி.பெ.அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் பிரியா. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பிரியாவுக்கு கடந்த 7ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 2ஆவது நாளில் குழந்தைக்கு சுவாசக்குழாய் மற்றும் உணவுக்குழாய் இணைந்து, சுவாச பிரச்சனை உள்ளது கண்டறியப்பட்டது. இந்நிலையில், உடனடியாக மருத்துவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, குறைபாட்டினை சரி செய்துள்ளனர்.

News September 25, 2024

ஈரோட்டில் ஆட்டோவில் கிடந்த ஆண் சடலம்

image

ஈரோடு வ.உ.சி., பூங்காவில் உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு நேற்று இரவு காய்கறி இறக்க சரக்கு ஆட்டோவில் மனோஜ்குமார் என்பவர் வத்துள்ளார். பின் இரவு அங்கேயே வாகனத்தை சாலையோரம் நிறுத்தி, ஆட்டோவில் படுத்து உறங்கி உள்ளார். இன்று காலை எழுந்து பார்த்த போது சரக்கு ஆட்டோவின் பின் பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசர் விசாரணை.

News September 25, 2024

வேளாண் குறைதீர் கூட்டம்: ஆட்சியர்

image

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகிக்க உள்ளார். எனவே இக்கூட்டத்தில், விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள், பங்கேற்று தங்கள் குறைகள் மற்றும் கருத்துக்களை தெரிவித்து பயன்பெறலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News September 25, 2024

வேலை வாய்ப்பு முகாம்

image

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் பயிற்சி மையத்துடன் இணைந்து சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28ஆம் தேதி கோவையில் உள்ள சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் நடக்கவுள்ளது. இதில் ஈரோட்டைச் சேர்ந்த 8, 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்கள், டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் கல்விச் சன்றிதழ்களுடன் பங்கேற்றலாம் என தெரிவித்துள்ளனர்.

News September 25, 2024

பர்கூர் போலீசார் சோதனையில் சிக்கிய 9 லட்சம் மதிப்புள்ள குட்கா

image

பர்கூர் போலீசாரின் வாகன சோதனையில், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்களை பறிதல் செய்தனர். அந்தியூர் அருகே உள்ள சத்தியமங்கலம் பகுதிக்கு, சர்க்கரை லோடின் அடியில் வைத்து கொண்டு வரப்பட்ட 9 லட்சத்தி 23 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, சக்தி கரட்டூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், ஸ்ரீநாத் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

News September 24, 2024

ஈரோட்டில் செல்போன் பறிப்பு: 3பேர் கைது

image

ஈரோட்டில் செல்போன் பேசியபடி சாலையில் நடந்து சென்ற தடகள வீராங்கனை செல்வியை பைக்கில் பின்தொடர்ந்து சென்ற நபர்கள் செல்போனை பறித்துச் சென்றனர். இந்நிலையில் இன்று சிசிடிவி காட்சிகள் உதவியுடன் ஒரு சிறார் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து செல்போனை மீட்டு செல்வியிடம் ஒப்படைத்தனர்.

News September 24, 2024

நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் வேலைவாய்ப்பு

image

ஈரோட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 10 சமுதாய அமைப்பாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணபதாரர் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஏதேனும் 1 டிகிரி (எம்எஸ் ஆபீஸ்) திறன் பெற்றவராக இருக்க வேண்டும். விபரங்களுக்கு 93635-12123 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News September 24, 2024

மாவட்ட விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்

image

ஈரோடு மற்றும் சேலம் மாவட்டதிற்கு உட்பட்ட அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, டி. என்.பாளையம், கொளத்தூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் இன்று அந்தியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருப்பூர் எம்பி சுப்பராயன் தலைமை வகித்தார். இதில் வெங்கடாச்சலம் எம்எல்ஏ.,முன்னாள் எம்.பி கோவிந்தராஜ் உட்பட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!