Erode

News October 1, 2024

மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழப்பு

image

பவானி அருகே உள்ள சேத்துனாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவன் தினேஷ்குமார். இவர் கடந்த ஒரு வார காலமாக மர்ம காய்ச்சல் அவதிப்பட்டு வந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மர்ம காய்ச்சலால் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 1, 2024

ஈரோடு மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

image

ஈரோடு மாவட்டத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாளை மாவட்டத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஊராட்சி பொது செலவினம், தணிக்கை அறிக்கை 2023-24, ஜல் ஜீவன் இயக்கம் போன்ற பல்வேறு கருத்துருக்கள் விவாதிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தை கண்காணிக்க அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News October 1, 2024

ஈரோடு: ரயில் சேவையில் மாற்றம்

image

ஈரோடு-செங்கோட்டை இடையே மதுரை இரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே ஈரோட்டிலிருந்து செங்கோட்டை செல்லும் ரயில் (16845) வரும் 7ஆம் தேதிமுதல் 28ஆம் தேதி வரை திண்டுக்கல்-செங்கோட்டை இடையே மட்டும் இயக்கப்படும். இதேபோல் செங்கோட்டையிலிருந்து ஈரோடு வரும் ரயில் (16846) வரும் 8ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை செங்கோட்டை-திண்டுக்கல் இடையே மட்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 1, 2024

ஈரோட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: ஆட்சியர்

image

ஈரோடு மாவட்டத்தில், நாளை (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இயங்கும் பார்களில் மது விற்பனை ஏதும் நடைபெறாது. மேலும் அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News September 30, 2024

உதயநிதிக்கு அந்தியூர் எம்எல்ஏ வாழ்த்து

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலம் தமிழக துணை முதலமைச்சர் ஆக பதவியேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் சென்று வாழ்த்துகளை அந்தியூர் சட்டமன்ற தொகுதி மக்களின் சார்பாகவும் மலைவாழ் மக்களின் சார்பாகவும் பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்தனர்.

News September 30, 2024

ஈரோடு: டிஜிட்டல் பேமெண்ட் வசதி அறிமுகம்

image

சத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களான விதை நெல், உளுந்து, மக்காசோளம், நிலக்கடலை மற்றும் உரங்கள் உள்ளிட்ட அனைத்து இடுபொருட்களும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. முன்பு ரொக்கமாக பணம் செலுத்தினர். இனி டிஜிட்டல் பேமெண்ட் முறையில் செலுத்தி பொருட்களை வாங்கி செல்லலாம் என உதவி இயக்குநர்(பொ) கற்பகம் தெரிவித்துள்ளார்.

News September 30, 2024

பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் அணையில் உபரி நீர் வெளியேறி வருகிறது. மேலும் மழைப்பொழிவு ஏற்பட்டால் ஏரிகளில் நிரம்பி வெள்ளம், அந்தியூர் நேருவீதி கண்ணப்பன் கிணற்று வீதி பெரியார் நகர், உள்ளிட்ட குடியிருப்பு பகுதி மக்களுக்கு வருவாய்த்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News September 30, 2024

தலைமையாசிரியர்கள் ஆய்வு கூட்டம் ரத்து

image

ஈரோடு, திண்டல் யு.ஆர்.சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஈரோடு கல்வி மாவட்ட அரசு/அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில், இக்கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என ஈரோடு தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

News September 30, 2024

ஈரோடு மாநகராட்சியுடன் 7 ஊராட்சிகளை இணைக்க திட்டம்

image

ஈரோடு மாநகரை ஒட்டியுள்ள வளர்ச்சியடைந்த பகுதிகளை ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்க 2016ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்து. பின் உள்ளாட்சி தேர்தலால் இந்த இணைப்பு செயல்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது, ஈரோடு மாநகராட்சியில் புதிதாகஎலவமலை, கதிரம்பட்டி, கூரப்பாளையம், மேட்டுநாசுவம்பாளையம், பிச்சாண்டாம்பாளையம், 46 புதூர், லக்காபுரம் ஆகிய 7 ஊராட்சிகள் ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

News September 30, 2024

பெருந்துறை அருகே லாரி தீ பிடித்து எறிந்து சேதம்

image

பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேட்டரி லோடுகளை ஏற்றி வந்த லாரி திடீரென தீ பற்றி விபத்துக்குள்ளானது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரிகள் தீயில் கருகி சேதமடைந்தது. போலீசார் அளித்த தகவலின் பேரில் பெருந்துறை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் லாரி தீயில் எரிந்து சேதமானது.

error: Content is protected !!