India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டில் நடப்பு நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.9,521 கோடிகடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். ஈரோட்டில் 85,000-க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர உற்பத்தி சேவை, வியாபார சாா்ந்த நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. ஈரோட்டில் உள்ள வங்கிகளுக்கு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க நடப்பு நிதியாண்டில் 9,521 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் செய்தியாளா்களிடம் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில், முழுமையான மதுவிலக்கு என்பது இந்தியாவில் எப்போதும் இருந்தது இல்லை. மது குடிப்பவா்கள் தங்கள் தவறை உணா்ந்து திருந்தினால் ஒழிய மதுவிலக்கை கொண்டுவருவது சிரமம். டாஸ்மாக் கடைகளை அதிகமாக மூடினால் கள்ளச்சாராயம் அதிகமாக காய்ச்சப்படும். அதற்கு பதில் விவசாயிகள் நலம்பெற கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம் என்றார்.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் மேம்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தொழிற்சாலை சாயக் கழிவால் புற்றுநோய் அதிகரித்துள்ளது. இந்த புற்றுநோய் என்பது உணவு பழக்க வழக்கங்களால் தற்போது அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 18 வயது தாண்டிய அனைவருக்கும் புற்று நோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
பவானிசாகர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் திருக்கோவிலில் இலவச திருமணம் தமிழக அறநிலை துறை மூலமாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 60,000 மற்றும் 4 கிராம் தங்கம் மதிப்பில் திருக்கோவிலில் இலவச திருமணம் 21.10.2023 முதல் நடைபெறுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது .இதில் ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளதாக பாராட்டுகின்றனர்.
அந்தியூர் அடுத்த பூனாட்சி பகுதியில் வடமாநில தொழிலாளர்களான குமார் (19) மற்றும் பரனித்தர்(19) ஆகியோருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதில், தினேஷ்குமார் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார். மேலும் ரதி (36) என்ற பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 3 தனியார் பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் பள்ளி இ -மெயில் ஐ.டி.க்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். இதை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், அப்பள்ளிகளில் சோதனையில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அது புரளி என தெரியவந்தது.
விடுதலைப் போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் பிறந்த இடமான சென்னிமலை கிழக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட படத்துக்கு தமிழக அரசு சார்பாக கலெக்டர் ராஜகோபால் சங்கரா தலைமையில் அதிகாரிகள் மரியாதை செலுத்தினார்கள். இதில் பி.டி.ஓ.,பாஸ்கர் பாபு , பாலமுருகன், செயல் அலுவலர் மகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் வணிகர்கள் தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடைகளை அமைக்க, அக்.12-க்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 62 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்ந விண்ணப்பங்கள் விண்ணப்ப தேதி நிறைவடைந்த பின் மாவட்ட வருவாய் அலுவலர், தீயணைப்பு துறை, போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, உரிய பாதுகாப்பு முறைகள் இருந்தால் மட்டுமே தற்காலிக பட்டாசு கடைக்கு அனுமதி அளிக்கப்படும்.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் கோபி நகர கிழக்கு மற்றும் மேற்கு கிளைகள் சார்பாக தியாகி திருப்பூர் குமரன் 121வது பிறந்தநாள் விழா கோபி பேருந்து நிலையம் முன்பு இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ கலந்துகொண்டு திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதில் கோபி கிழக்கு கிளை தலைவர் காளீஸ்வரன், மேற்கு கிளை தலைவர் கேசவன் உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகள் 50% மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பயனாளி சொந்த செலவில் ரூ.3200 கொள்முதல் செய்ய திறன் பெற்றிருக்க வேண்டும். தகுதியானோர் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு 9443941443, 9842759545 எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.