Dindigul

News February 19, 2025

திண்டுக்கல் மக்களே எச்சரிக்கை இதுதான்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று “லோன் ஆப் செயலி மூலம் கடன் வாங்காதீங்க.. இதன்  மூலம் உங்களது தகவல்கள் திருடப்பட்டு உங்களை மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News February 19, 2025

IP-இன் உருவ பொம்மை எரிப்பு போராட்டம

image

திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக முன்னாள் வழக்கறிஞர் சங்க செயலாளரை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தாக்கியதாக வழக்கறிஞர்கள் சங்க சார்பில் போராட்டம் நடைபெற்று வந்தது. இன்று அமைதி பேச்சு வார்த்தைக்கு பின்பும் வருகின்ற வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் உருவ பொம்மையை எரிப்பது என வழக்கறிஞர் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News February 19, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

image

திண்டுக்கல், பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர்கள் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக பழனி, சிவகிரிபட்டியை சேர்ந்த பொன்குமார்(30) என்பவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News February 19, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

திண்டுக்கல்லில் இன்று 18-02-2025 இரவு 11.00 மணி முதல் நாளை புதன்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News February 18, 2025

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், ஒட்டன்சத்திரம் கிறித்துவ பாலிடெக்னிக் கல்லூரியில் 22.02.25 அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று 25,000-க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு வேலைநாடுநர்கள் தேர்வு செய்ய உள்ளனர். ஆகையால் இதனை பயன்படுத்தி கொள்ள ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 18, 2025

பயங்கர வெடி சத்தம்: பெயர்ந்த கட்டிடம் 

image

எரியோடு அருகே நாகைய கோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 495 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் திடீரென வானத்தில் பயங்கர வெடி சத்தம் கேட்டு பள்ளி கட்டிடம் அதிர்ந்தது. இதில் எட்டாம் வகுப்பு ஆ பிரிவை சேர்ந்த வகுப்பறையில் மேற்கூரை காங்கிரீட் பெயர்ந்து விழுந்தது. மாணவர்கள் உள்ளே இல்லாததால் எந்த வித அசம்பாவிதம் இன்றி உயிர் தப்பினர்.

News February 18, 2025

திண்டுக்கல் வேலைவாய்ப்புக்கு ஏற்ற தலம்

image

திண்டுக்கல்லில் மூலவர் குபேரலிங்கேஸ்வரர் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது சிறப்பு. இத்தகைய மேற்கு பார்த்த சிவனை தரிசிப்பது ஆயிரம் சிவாலயங்களை தரிசித்த பலனை தரும் என்பது சிறப்பு. வேலைவாய்ப்பு, திருமண தடை போன்றவற்றிற்கு இக்கோயில் சிறந்தது. எனவே அன்பர்கள் வந்து வழிபட நல்ல பலன் காணலாம். இக்கோயிலை அனைவரும் ஷேர் செய்யுங்கள்.

News February 18, 2025

வடமதுரை அருகே பயங்கர வெடிச்சத்தம்

image

திண்டுக்கல், வேடசந்தூர் தாலுகா, வடமதுரையில் இன்று 18.02.2024 காலை 11:30 மணிக்கு பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து வடமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் லேசான அதிர்வு உணரப்பட்டது. இந்த பயங்கர வெடி சத்தம் மற்றும் அதிர்வு கடந்த சில வருடங்களாக இந்த பகுதியில் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News February 18, 2025

வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு 

image

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க முன்னாள் செயலாளர் உதயகுமார் கடுமையாக தாக்கப்பட்டார். இதை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வலியுறுத்தியும் இன்று 18-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் மற்றும் செயலாளர் கென்னடி இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.

News February 17, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம் 

image

திண்டுக்கல்லில் இன்று 17-02-2025 இரவு 11.00 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!