India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் “My v3ads” நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. பின் மோசடி புகாரால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் அடைந்தவர்கள் காலம் தாமதிக்காமல் புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டனர். எனவே, திண்டுக்கல் மக்களே இதில் ஏமாற்றம் அடைந்திருந்தால் உடனே புகார் அளிக்கலாம்.
கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் நடைபெற்ற பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்தப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா்கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தடை விதித்தனா். இந்நிலையில் நேற்று முதல் பேரிஜம் ஏரியைப் பார்வையிட வனத்துறை சாா்பில் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான மாரியம்மன்கோயில் மாசித் திருவிழாவையொட்டி, முகூா்த்தக்காலுக்கு நேற்று இரவு சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் செய்யப்பட்டன. பமுகூா்த்தக்காலை கோயிலின் வெளிப்புறமாக ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டு நடப்பட்டது. தொடா்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இன்று (பிப்.21) இரவு 11.00 மணி முதல் நாளை புதன்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். அதற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கலாம் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியில், நிலத்தில் போர் அமைக்க பயன்படுத்தும் லாரி தீப்பிடித்து எரிவதாக, திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்புதுறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (21.02.2025) 2023-2024ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காவலர் மற்றும் அமைச்சு பணியாளரின் 2 பிள்ளைகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் வழங்கினார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் தினந்தோறும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பல்வேறு வகையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் துறை மூலம் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று வங்கியில் இருந்து பேசுவதாக கூறி உங்கள் KYC விவரங்களை கேட்டால் அவர்களிடம் தெரிவிக்க வேண்டாம் என்றனர்.
ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ பாலிடெக்னிக்கில் மாவட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டல் மையத்தின் கீழ் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 10,000 மேலான காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள எட்டாம் வகுப்பு முதல் ஐடிஐ டிப்ளமோ டிகிரி முடித்து வேலைக்காக காத்திருப்பவர்கள் தவறாமல் கலந்து பயன்பெறலாம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதி கொடைக்கானல் சுற்றுலாதலமான, பூம்பாறை மலை கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் இன்று காலை, தமிழ் திரைப்பட இயக்குநர் டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து சாமி தரிசனம் செய்தார். மேலும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
வாழிய வாழியவே! இளமை குன்றா எமது இனிய மொழி, “யாதும் ஊரே” “யாவரும் கேளிர்” என்று உரைத்த பொன்மொழி, பாரெங்கும் பரந்து விரிந்துள்ள உலக மொழி, வான் புகழ் கொண்ட நம் செம்மொழியான, தமிழ் மொழி- வாழிய வாழியவே, என்று உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தனது சமூக வலைதள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.