India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுத திண்டுக்கல், பழநி கல்வி மாவட்டங்களிலுள்ள 216 பள்ளிகளைச் சேர்ந்த 9,965 மாணவர்கள், 10,900 மாணவிகள் என மொத்தம் 21,042 பேர் விண்ணப்பித்திருந்தனர்.இதுதவிர தனித் தேர்வர்களாக 273 பேர் விண்ணப்பித்தனர். இந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 86 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
திண்டுக்கல்: மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் வேளாண் துறையில் கௌரவ விரிவுரையாளர் / பகுதி நேர ஆசிரியர்கள் காலிப் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்றிமலை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). விவசாயியான இவர், திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். பன்றிமலை பகுதியிலிருந்து செம்பட்டி வழியாக திண்டுக்கல் நோக்கி மணிகண்டன் பைக்கில் நேற்று சென்றார். அரசு கூட்டுறவு கலைக் கல்லூரி முன் திண்டுக்கல்லிலிருந்து செம்பட்டி நோக்கி வந்த காா் அவா் மீது மோதியதில் சம்பவ இடத்திலே பலியானார், செம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் நகர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 217 பள்ளிகளில் 86 மையங்களில் 100-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் 21,191 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். இது தொடர்பாக திண்டுக்கல் ஆட்சியர் சரவணன் தேர்வு மையங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். காட்சிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பங்கேற்றார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்குட்பட்ட வாகரை அருகே உள்ள பூலாம்பட்டி சாலையில் இன்று காலை வாகன விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பூலாம்பட்டி பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அரசு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்கியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 21,817 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (‘சாலையில் சாகசம் வேண்டாம், மிதவேகம் மிக நல்லது’) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 216 பள்ளிகளைச் சேர்ந்த 10,361 மாணவர்கள், 11,451 மாணவிகள் என மொத்தம் 21,817 பேர் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் 86 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. தனித்தேர்வர்களாக 273 பேர் எழுதுகின்றனர்.
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. திண்டுக்கல்லில் மட்டும் 63 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.10,000 முதல் 29ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசிநாளாகும். விண்ணப்பிக்க இங்கே<
Sorry, no posts matched your criteria.