India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று, ( பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சாலையில் விளையாடாமல் கவனித்துக் கொள்ளுங்கள், சிறுவர்களின் அறியாமை விபத்தில் முடியும்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது,
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் பெரியசாமி கூறினார். இதுகுறித்து அவர் பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மழையால் பாதிப்படைந்த பயிர்களுக்கான நிவாரணம் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாவட்ட முழுவதும் 384 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. வங்கி கணக்குகளிலும் நிவாரணத் தொகை செலுத்தப்பட உள்ளது என்றார்.
திண்டுக்கல், பழனிரோடு, K.K.நகர் பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் மைக்கேல்ராஜ்(63). இவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம் திண்டுக்கல் நகர் ஒட்டன்சத்திரம் பழனி நிலக்கோட்டை கொடைக்கானல் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இன்று ‘இணையதளத்தில் பல போலியான முதலீட்டு செயலிகள் (Investment Apps) உள்ளது. எச்சரிக்கை’ பதிவினை பதிவிட்டு விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகின்றது. அந்த வகையில், வரும் சனிக்கிழமை 22.02.2025 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் மூலம் சுமார் 10,000 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பணியாணை வழங்குகிறார்.
திண்டுக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுத திண்டுக்கல், பழநி கல்வி மாவட்டங்களிலுள்ள 216 பள்ளிகளைச் சேர்ந்த 9,965 மாணவர்கள், 10,900 மாணவிகள் என மொத்தம் 21,042 பேர் விண்ணப்பித்திருந்தனர்.இதுதவிர தனித் தேர்வர்களாக 273 பேர் விண்ணப்பித்தனர். இந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 86 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
திண்டுக்கல்: மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் வேளாண் துறையில் கௌரவ விரிவுரையாளர் / பகுதி நேர ஆசிரியர்கள் காலிப் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்றிமலை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). விவசாயியான இவர், திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். பன்றிமலை பகுதியிலிருந்து செம்பட்டி வழியாக திண்டுக்கல் நோக்கி மணிகண்டன் பைக்கில் நேற்று சென்றார். அரசு கூட்டுறவு கலைக் கல்லூரி முன் திண்டுக்கல்லிலிருந்து செம்பட்டி நோக்கி வந்த காா் அவா் மீது மோதியதில் சம்பவ இடத்திலே பலியானார், செம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் நகர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Sorry, no posts matched your criteria.