India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் வெறுப்பு அடைய வைக்கும். திண்டுக்கல் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை SAVE செய்து உடனே மற்றவருக்கு ஷேர் பண்ணுங்க.

மக்களே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் இன்றே கடைசி நாள். பெயர் சேர்க்க விரும்புவோர் https://voters.eci.gov.in/ இணையதளத்தில் படிவம் 6-ஐயும், முகவரி அல்லது பெயர் திருத்தம் செய்ய விரும்புவோர் படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.ஷேர் பண்ணுங்க

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும். திண்டுக்கல் மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்

திண்டுக்கல் மாவட்டத்தில் இயக்கப்படும் 201 அரசு டவுன் பஸ்கள் மூலம் பெண்கள் இதுவரை 23 கோடியே 95 லட்சத்து 394 முறை கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர். பழனி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை இணைக்கும் இந்தச் சேவை, பெண்களின் அன்றாடப் பயணச் சுமையைக் குறைத்துள்ளது. அதே வேளையில் பேருந்துகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அஇஅதிமுக கலை–இலக்கிய பிரிவு மாவட்ட செயலாளராக இருந்த S.K.K.ஹக்கீம், அக்கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!

இன்று கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று மீண்டும் உறைபனி நிலவியது. கொடைக்கானல் மலைப்பகுதியில் புல்வெளிகள் மற்றும் செடி, கொடிகள் மீது பனித்துளிகள் படர்ந்து கிடந்தன. மேலும் அதிகாலை நேரத்தில் நட்சத்திர ஏரியில் 6 டிகிரி செல்சியசுக்கு குறைவாக வெப்பநிலை நிலவியது.

திண்டுக்கல் வரும் 21-ம் தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக செம்பட்டி, பழைய செம்பட்டி, கோடாங்கிபட்டி, முண்டாம்பட்டி.
ஆத்தூர், சித்தையன்கோட்டை, காமலாபுரம், ராமராஜபுரம். பாளையங்கோட்டை, வீரக்கல், கசவனம்பட்டி, அம்பாத்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்கள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஜன.17) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஜன.17) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.