Dindigul

News August 24, 2024

முருகன் மாநாடு குத்துவிளக்கு ஏற்றிய அமைச்சர்!

image

திண்டுக்கல், பழனியில் இன்று நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு நிகழ்ச்சியைக் காண பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என மாவட்ட ஆட்சியர் வைத்துள்ளார். இந்நிலையில் பழனியில் இன்று நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

News August 24, 2024

பழனி முருகன் மாநாட்டிற்கு கட்டுப்பாடு எண்கள் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் இன்றும், நாளையும் அகில உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டிற்கு இணையதளம் வாயிலாக பதிவு செய்தவர்கள் தொலைபேசி எண்கள் வாயிலாக விவரங்களை பெறலாம். மாநாடு குறித்த விவரங்களை 04544-241471, 04545-241472, 04545-241473 என்ற எண்கள் மூலம் அறியலாம்.

News August 24, 2024

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடக்கம்!

image

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் இன்று
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்குகிறது. காலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றப்படுகிறது. 8.55 மணிக்கு 100 அடி கம்பத்தில் மாநாட்டுக் கொடியை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஏற்றி வைக்கிறார். இன்றும், நாளையும் நடைபெறும் மாநாட்டில் ஆன்மிக சொற்பொழிவு, கருத்தரங்கம், நாடகம், நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

News August 24, 2024

பழனி: மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டி!

image

பழனி மாநாட்டில் இரண்டு நாள் 30 ஆயிரம் பேர் சாப்பிட வசதியாக ஆங்காங்கே ஸ்டால்கள் & உணவு வழங்கிடவும் பக்தர்கள் அமர்ந்து சாப்பிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்ட தன்னார்வலர்கள் மாணவ, மாணவிகளை பயன்படுத்திக் கொள்ளவும், கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 450க்கும் மேற்பட்டவர்கள் 2 நாட்கள் சீருடையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News August 24, 2024

பழனி மாநாடு: உணவுத் தயாரிப்பில் 400 ஊழியா்கள்

image

பழனியில் 2 நாள்கள் நடைபெறும் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு வரும் சிறப்பு அழைப்பாளா்கள் முதல் பொதுமக்கள் வரை, அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவுத் தயாரிப்பதற்கான பணியில் 400 ஊழியா்கள் ஈடுபட உள்ளனா். உணவுத் தயாரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு, சுகாதாரத் துறை சாா்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

News August 24, 2024

முருகன் மாநாடு ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில் பந்தல்!

image

பழனி முருகன் மாநாட்டில் விழா மலர், ஆய்வுக்கட்டுரை மலரும் வெளியிடப்பட உள்ளது.
முருகன் கோயில் குறித்த 8 அலங்கார வளைவுகள், 100 அடி உயர கொடி, மலைக்கோயில் முகப்புடன் ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுடன் கூடிய மருத்துவ முகாம்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து செல்ல சக்கரநாற்காலிகள் வசதியும் செய்யப்பட்டுள்ளது.  

News August 24, 2024

பழநியில் இன்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு

image

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஹிந்து அறநிலைத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று துவங்குகிறது. இதில் நீதிபதிகள், ஆதினங்கள், வெளிநாட்டினர் பங்கேற்பதுடன், 1300 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. உயர்நிலை செயல் திட்ட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களில் ஒன்றான அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டது.

News August 24, 2024

முருகன் மாநாடு பிரசாதம் வழங்க ஏற்பாடு

image

பழனியில் இன்று முத்தமிழ் முருகன் மாநாடு பிரம்மாண்டமாக துவங்க உள்ள நிலையில் மாநாட்டில் கலந்து கொள்ளும் ஒரு லட்சம் பேருக்கு உணவு ஏற்பாடு மற்றும் ஒரு லட்சம் பேருக்கு பஞ்சாமிர்தம், குங்குமம், விபூதி உள்ளிட்டவை மற்றும் முருகன் போட்டோ உள்ளிட்டவை அடங்கிய பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News August 23, 2024

பழனியில் லட்சக்கணக்கானோர் எதிர்பார்ப்பு

image

பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் 5 லட்சம் பேர் எதிர்பார்க்கப்படுகிறது. 10 இடங்களில் உணவு வழங்கிடவும், 200 இடங்களில் குப்பை தொட்டி வைத்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தூய்மை செய்வது, தடையின்றி குடிநீர், 17 இடங்களில் சுகாதாரத் துறையின் மூலம் 34 குழுக்கள் பணியாற்ற உள்ளனர். 14 இடங்களில் ஆம்புலன்ஸ் என அனைத்து அடிப்படை வசதிகள் தயார் என முதன்மை செயலாளர் சந்திர மோகன் தகவல் தெரிவித்துள்ளார்

News August 23, 2024

பழனியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

image

பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று சாமி தரிசனம் செய்தார் .ரோப் கார் மூலம் மலை மேல் சென்று அவர், சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும் அவருடன் காவல் துறையினர் பாதுகாப்புக்காக சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!