Dindigul

News August 25, 2024

முருகன் மாநாடு – தீர்மானங்கள் நிறைவேற்றம்!

image

பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்; முதற்கட்டமாக 143 முருகன் கோயில்களில் ₹50 கோடியில் திருப்பணிகள் தொடங்க தீர்மானம் அர்ச்சகர்கள், ஒதுவார்கள் உள்ளிட்டோரை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் 10 பேருக்கு விருது; அறுபடை வீடு பயணம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை 1,500 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News August 25, 2024

கலெக்டருக்கு நினைவு பரிசு வழங்கிய அமைச்சர்

image

திண்டுக்கல், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றாக செய்திருந்தனர். இதனைப் பாராட்டி இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடிக்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நினைவுப் பரிசு வழங்கினார்.

News August 25, 2024

திண்டுக்கல்லில் வ.உ.சி பேரவை ஒருங்கிணைப்பு கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்ட அகில இந்திய வ.உ.சி பேரவையின் ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதில் பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

News August 25, 2024

முத்தமிழ் முருகன் 2ஆம் நாள் மாநாடு

image

திண்டுக்கல், பழனியில் இன்று மிக பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முதல் நாள் நிகழ்வு நேற்று இரவு 9.30 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீண்டும் 8:30 மணிக்கு இரண்டாம் நாள் நிகழ்வு தொடங்கும். மேலும் இரண்டாம் நாளிலும் முருகன் பற்றிய கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 25, 2024

நத்தம் அருகே வெடி விபத்தில் 2 பேர் பலி

image

திண்டுக்கல், நத்தம் அருகே ஆவிச்சிபட்டி பகுதியில் செல்வம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் இடம் உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியாயினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த நத்தம் காவல் துறையினர் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 25, 2024

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை முன்னிட்டு, அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கம் பொதுமக்கள் அனைவரும் பார்வையிடும் வகையில் 30.08.2024 வரை திறந்திருக்கும். இதில் அனைவருக்கும் அனுமதி இலவசம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

News August 25, 2024

திண்டுக்கல்: ரேசன் அரிசி பதுக்கியவர் கைது

image

திண்டுக்கல் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் திண்டுக்கல் அருகே குட்டியபட்டி அண்ணா நகரில், ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்த பேகம்பூரை சேர்ந்த நாகராஜன் (51) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடமிருந்து 1 டன் மதிப்பிலான 22 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

News August 24, 2024

தமிழக அரசை பாராட்டி ஜப்பானிய முருக பக்தர்கள் 

image

பழனியில் இன்று நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில், ஜப்பான் நாட்டை சேர்ந்த குருஜி பால கும்ப குருமணி தலைமையில், 55 ஜப்பானிய முருக பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள், மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்து, நினைவு பரிசினை அறநிலையத்துறை அமைச்சரிடம் வழங்கினார்கள். 

News August 24, 2024

முருகன் மாநாடு மூன்று வகை உணவு பட்டியல்

image

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் விஐபி-க்கள், வெளிநாட்டினர் மற்றும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக மூன்று வகை உணவு பட்டியல் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான முறையில் உணவு தயாரிக்கப்படுவதை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

News August 24, 2024

பழனி முருகன் மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் இன்றும், நாளையும் அகில உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக சற்றுமுன் தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

error: Content is protected !!