Dindigul

News August 31, 2024

திண்டுக்கல்: விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு

image

நிலக்கோட்டை துள்ளுப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர் மாணிக்கம் (62) – போதுமணி (58). இவர்கள் நேற்று காமலாபுரத்திலிருந்து, கொடைரோடு வழியாக, நிலக்கோட்டை நோக்கி டூவீலரில் சென்றனர். அவர்கள் காமலாபுரம் பிரிவில் நெடுஞ்சாலையை கடந்தபோது, மதுரை நோக்கி சென்ற சொகுசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே மாணிக்கம் உயிரிழந்தார். பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் போதுமணி உயிரிழந்தார்.

News August 30, 2024

பாலியல் வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை

image

நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 15 வயது சிறுமியை கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்து பாலியல் வழக்கில் இன்று திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், எழுவனுக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 5 1/2 ஆண்டுகள் சிறை, ரூ.1,56,000 அபராதம், சின்னையாவுக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 2 ஆண்டுகள் சிறை, ரூ.1லட்சம் அபராதம், விஜயாவிற்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 2 ஆண்டுகள் சிறை, ரூ.1லட்சம் அபராதம். 

News August 30, 2024

திண்டுக்கல் அருகே விபத்து: ஒருவர் பலி

image

திண்டுக்கல் -மதுரை பைபாஸ் ரோட்டில் காமலாபுரம் பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் இன்று பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 30, 2024

கோவில் திருவிழாவிற்கு உத்தரவு கிடைத்தது

image

திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீ அகரம் முத்தாலம்மன் திருக்கோவிலில் திருவிழா நடத்துவதற்காக சகுனம் கேட்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருவிழா நடத்துவதற்கான சகுனம் கிடைத்தது. ஆகையால் திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெறும். மேலும் விழா அக்-21,22ம் தேதி நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

News August 30, 2024

அரசு மருத்துவமனையில் ரகளை: 2 பேர் கைது

image

நத்தம் நேரு நகரை சேர்ந்தவர் சதீஸ்பாண்டி (21). இவரது நண்பர் பிரகாஷ்ராஜ் (23). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் நத்தம் அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனையின் கண்ணாடியை கல்லை வைத்து எரிந்து உடைத்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த புகாரில், நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஸ்பாண்டி, பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

News August 30, 2024

திண்டுக்கல்லில் 25.60 மி.மீ மழைப்பதிவு

image

திண்டுக்கல்லில் நேற்று காலை 8.30 முதல் இன்று காலை 8.30 வரை பெய்த மழை அளவு: திண்டுக்கல் RDO அலுவலகம் 0.00மி.மீ, காமாட்சிபுரம் 0.80மிமீ, நத்தம் 17.00மிமீ, நிலக்கோட்டை 0.00மிமீ, வேடசந்தூர் தாலுகா அலுவலகம் 1.40 மி.மீ, வேடசந்தூர் புகையிலை நிலையம் 1.40மி.மீ, பழனி 0.00மி.மீ, ரோஜா தோட்டம் 3.50மி.மீ, பிரையண்ட் பூங்கா 1.50மி.மீ என மொத்தம் 25.60மி.மீ, சராசரி 2.56மி.மீ, மழை பெய்துள்ளது.

News August 30, 2024

கொடைக்கானல்: கொலை வழக்கில் இருவர் சரண்

image

கொடைக்கானல் அருகே பழம்புத்தூரில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் இருவர் கொடைக்கானல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பழம்புத்தூர் சேர்ந்த ராமுவை (23) என்பவரை பாண்டி தரப்பினர் கொலை சேதனர். இந்த வழக்கில் கொடைக்கானல் போலீசார் பாண்டி (30), பழனிச்சாமி (60), சிவா (23), ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவான கிஷோர் (23), ஜெயக்குமார் (30) கொடைக்கானல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.

News August 30, 2024

திண்டுக்கல்: பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு

image

நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2022-ம் ஆண்டு 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, நிலக்கோட்டை புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன்(33) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கில் திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம், குற்றவாளி மகேந்திரன் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1,00,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.

News August 30, 2024

திண்டுக்கல்லில் ஹாக்கி போட்டி நடைபெற்றது

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் பிரிவு அலுவலகம் சார்பில், மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி நேற்று நடைபெற்றது. மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், மாணவர்கள், மாணவிகள் சார்பில் தலா 4 அணிகள் பங்கேற்றனர். இரு பிரிவிலும் முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப் பள்ளி அணிகள் முதலிடம் பிடித்தன. வெற்றிபெற்ற அணிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

News August 30, 2024

திண்டுக்கல்: அரசுப் பள்ளி மாணவி மருத்துவ படிப்புக்கு தேர்வு

image

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்டையைச் சேர்ந்த விவசாயி செல்லமுத்து- முத்துலட்சுமி தம்பதியின் மகள் பிரதீபா. அதே ஊரில் உள்ள நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர், நீட் தேர்வில் 551 மதிப்பெண்கள் பெற்று, திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் முதலிடம் பிடித்தார். இவருக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

error: Content is protected !!