Dindigul

News January 31, 2026

எரியோடு அருகே பயங்கர விபத்து!

image

எரியோடு அருகே இன்று அதிகாலை தொட்டணம்பட்டி–நலமானார்கோட்டை இடையே சாலையில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் அடையாளம் தெரியாத நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 31, 2026

பழனியில் இன்று முதல் இலவசம்!

image

பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி, வ.உ.சி. பஸ் நிலையத்திலிருந்து கோவில் அடிவாரத்திற்குப் பக்தர்கள் சென்று வரக் கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு, 3 அரசு டவுன் பேருந்துகள் மற்றும் 3 மினி பேருந்துகள் இந்த இலவச சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இத்திட்டம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

News January 31, 2026

திண்டுக்கல்: GPay, PhonePe, Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 31, 2026

திண்டுக்கல்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

திண்டுக்கல் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது.8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இந்த சூப்பரான தகவலை SHARE பண்ணுங்க.

News January 31, 2026

வத்தலகுண்டில் பரபரப்பு; அழுகிய நிலையில் சடலம் மீட்பு

image

வத்தலகுண்டு காந்திநகரைச் சோ்ந்தவா் ஜெயபாண்டி வழக்குரைஞா். இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.இந்த நிலையில், கடந்த 16 நாள்களாக ஜெயபாண்டி வீடு பூட்டியே கிடந்தது. மேலும், வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியது. போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, ஜெயபாண்டி அழுகியநிலையில் உயிரிழந்து கிடந்தாா். இதுகுறித்து போலீஸார் விசாரணை

News January 31, 2026

திண்டுக்கல்லில் வசமாக சிக்கிய திருடன்!

image

திண்டுக்கல் அருகே வீரக்கல் குரும்பபட்டியை சேர்ந்தவர் மாயன் (வயது 46). இவர் வத்தலக் குண்டு சர்வீஸ் ரோட்டில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த ஸ்ரீரங்கன் (28) என்பவர் மாயனிடம் கத் தியை காட்டி செல்போனை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து ஸ்ரீரங்கனை கைது செய்தனர்.

News January 31, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஜனவரி 30 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 31, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஜனவரி 30 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 31, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஜனவரி 30 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 31, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஜனவரி 30 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!