Dindigul

News October 11, 2024

பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி

image

கொடைக்கானலில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினரின் அனுமதியை பெற வேண்டும். கடந்த 2 நாட்களாக, பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பேரிஜம் ஏரிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) 11ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News October 11, 2024

பழநி முருகன் கோயிலில் நாளை நடையடைப்பு

image

பழநி முருகன் கோயில் துணை கோயிலான பெரியநாயகி அம்மன் கோயில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நாளை கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயிலில் வன்னிகா சூரன் வதம் நடக்கிறது. பழநி கோயிலிருந்து பராசத்தி வேல் வரும் நிலையில் பக்தர்கள் காலை 11 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். இதையடுத்து மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. பிற்பகல் 3.15-க்கு மலைகோவில் நடை அடைக்கபடுகிறது.

News October 11, 2024

திண்டுக்கல் மக்களே ரேஷன் கடையில் வேலை!

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர், கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 63 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

News October 10, 2024

திண்டுக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் மற்றும் மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி
மாணவர்களுக்கானப் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன. விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ (அ) தொலைபேசி (எண் 0451-2461585) வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News October 10, 2024

திண்டுக்கல்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி மன்றக்கூடத்தில் 18.10.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள், அரசின் மானியத்திட்டங்கள், மேலும், விவசாயிகள், விவசாயம் சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து, தீர்வு கண்டு பயன்பெறலாம்.

News October 10, 2024

அரசு பேருந்தின் ரெடியேட்டர் வெடித்து விபத்து

image

கொடைக்கானலில் அரசு பேருந்து வில்பட்டி கிராமத்திற்கு சென்று விட்டு அங்கிருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு பேருந்து நிலையத்திற்கு வரும் போது நாயுடுபுரம் மலைச்சாலையில் பேருந்து வந்து கொண்டிருக்கும் போது தீடீரென ரேடியேட்டர் வெடித்தது. அப்போது பேருந்தில் பயணித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நல்வாய்பாக ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

News October 10, 2024

இரத்த கொடையாளர் விருது வழங்கிய ஆட்சியர்

image

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று தன்னார்வ இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க இரத்த தான கழகத்திற்கு சிறந்த இரத்த கொடையாளர் விருதை திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி வழங்கினார். உடன் அரசு மருத்துவமனை டீன் மற்றும் அரசு மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News October 10, 2024

கொடைக்கானலில் நிலப்பிளவு: ஆய்வு அறிக்கை வெளியீடு

image

கொடைக்கானலில் ஏற்பட்ட நிலப்பிளவுக்கான முதற்கட்ட ஆய்வு அறிக்கை வெளியானது. இந்திய புவியியல் ஆய்வு மையம் சார்பாக முதற்கட்ட பிரத்யேக ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது; கூனிபட்டி அருகே உள்ள நீர்நிலையில் இருந்து தண்ணீர் அதிகளவில் பூமிக்குள் நுழைந்துள்ளதால் பிளவு ஏற்பட்டிருக்கலாம். நிலப்பிளவு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 10, 2024

திண்டுக்கல்லில் எகிறியது மல்லி பூ விலை

image

இந்தியா முழுவதும் ஆயுதபூஜை நாளை மற்றும் நாளை மறுநாள் விமர்சையாக கொண்டாடப்பட
உள்ளது. பொதுவாக விஷேச தினங்களில் பூக்கள் விலை ஏறுவது வழக்கம். அதை முன்னிட்டு பூ மார்ககெட்டுகளில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மல்லி பூ கிலோ ரூ.1000க்கு மேல் விற்பனையாகிறது. பூக்கள் வாங்க வரும் பொதுமக்கள் விலைகளை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News October 10, 2024

திண்டுக்கல்லில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

image

திண்டுக்கல் மண்டல அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு அக்.13-ஆம் தேதி வரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்கு வரும் பயணிகளுக்காக 70 பேருந்துகளும், விடுமுறை முடிந்து சென்னை திருப்புவோருக்கு வசதியாக 70 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!