India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரேசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 31 ஆம் பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டு பல்கலைகழக மாணவிகளுக்கு பட்டமளிக்க உள்ளனர். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை தமிழக ஆளுநர் வருகையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
வத்தலகுண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாலை அலுவலகம் முடியும் நேரத்தில் திடீரென்று திண்டுக்கல் லஞ்சஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான போலீசார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் ரூ.82,900 கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர்.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று (21.10.24) காலை 9:30 மணி முதல் இன்று (22:10:24) காலை 9.30 மணி வரை திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், நிலக்கோட்டை, போன்ற பகுதிகளில் பெய்த கனமழையின் அளவுகள் திண்டுக்கல் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை சிவக்குமார் DSP, DCRB, திண்டுக்கல் தலைமையில் காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 184 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவுறுத்தினார்.
உடன் அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.
நிலக்கோட்டை ஒன்றியம் விளாம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பழுதடைந்த கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய இரண்டு வகுப்புகள் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற்றது. தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மணிகண்டன் அவர்கள் பூமி பூஜை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் கிளவராஜா, கவுன்சிலர் தியாகு, துணைச் செயலாளர் வள்ளிமலை, மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நடைபெறுகிற, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆண்டி அம்பலம் இல்லத்திருமணவிழாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செல்லும் வழியில் நாகல் நகர், சாணார்ப்பட்டி, நத்தம் பைபாஸ் உள்ளிட்ட இடங்களில் பெருமளவு, திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டுவந்து வரவேற்பு இன்று அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
திண்டுக்கல் துணைமின் நிலையம், செம்பட்டி துணை மின்நிலையம், காந்தி கிராம துணை மின்நிலைய பகுதியில் நாளை (22.10.24) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், அன்று காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை அப்பகுதியில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.