Dindigul

News February 4, 2026

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.03) குழந்தைகளை பேருந்தில் அழைத்து செல்லும் போது தலை மற்றும் கைகளை வெளியில் நீட்டாமல் பாதுகாப்பாக அழைத்து செல்வோம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News February 3, 2026

திண்டுக்கல்: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

image

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5. <>newscheme.tahdco.com <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!

News February 3, 2026

விஜய் விமர்சனம்: அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!

image

திண்டுக்கல்: திமுகவை ‘பழைய டப்பா’ என தவெக தலைவர் விஜய் விமர்சித்த நிலையில், கரூரில் உயிரிழந்தவர்களை பார்க்க மனமில்லாத விஜய், எப்படி 8 கோடி மக்களை காப்பாற்ற போகிறார் என அமைச்சர் ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சினிமா அரசியல் மக்கள் மத்தியில் எடுபடாது என்று சாடிய அவர், “இந்த டான்ஸ் பழைய டான்ஸ், இவரின் டப்பாங்குத்து இங்கே வேலை செய்யாது” என தெரிவித்துள்ளார்.

News February 3, 2026

திண்டுக்கல்: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

image

திண்டுக்கல் மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News February 3, 2026

BREAKING: பழனியில் இளம்பெண் படுகொலை

image

பழனி அருகே இன்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர். விசாரணையில் அப்பெண்ணின் பெயர் கீதா (25) என்பது தெரியவந்தது.

News February 3, 2026

திண்டுக்கல்: POST OFFICE வேலை- தேர்வு கிடையாது!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு:<> CLICK HERE.<<>>
(இந்த தகவலை SHARE பண்ணுங்க)

News February 3, 2026

திண்டுக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

திண்டுக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>’Tamil Nilam’<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News February 3, 2026

VIRAL: வத்தலக்குண்டு அருகே அதிசயம்

image

வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த விவசாயி ரஞ்சித், கடந்த 20 ஆண்டுகளாக மாட்டுப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது பண்ணையில் உள்ள பசு அண்மையில் கன்று ஈன்றது. அப்பசுங்கன்று 6 கால்களுடன் பிறந்துள்ளது. 6 கால்களுடன் இருந்தாலும், மற்ற சாதாரண கன்றுகளை போலவே இதுவும் மிகுந்த ஆரோக்கியத்துடன் வளர்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த அதிசய கன்றை ஊர் மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

News February 3, 2026

பழனி அருகே விபத்து: ஒருவர் பலி

image

பழனி, பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பழனி நோக்கிச் சென்றபோது, எதிரே வந்த டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News February 3, 2026

பழனி அருகே விபத்து: ஒருவர் பலி

image

பழனி, பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பழனி நோக்கிச் சென்றபோது, எதிரே வந்த டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!