India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழனியில் கந்த சஷ்டி விழாவின் மிக முக்கிய திருவிழாவாக சூரசம்காரம் நாளை நடைபெற உள்ளதால் சூரபத்மன் பொம்மைகள் தயாரிப்பு நிலையில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாளை மதியம் மலைக்கொழுந்து அம்மனுடன் வேல் வாங்கி முருகன் மலை அடிவாரம் வந்து சூரசம்ஹாரம் செய்வதற்காக சூரபத்மனை ஆங்காங்கே அமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். அசுர குளம் அழிந்து தர்மம் நிலை காப்பதாக புராணம் கூறப்படுகிறது.
திண்டுக்கல் நைனார் முகமது தெரு பகுதியைச் சேர்ந்த சவரிமுத்து என்பவர் வீட்டில் கடந்த மாதம் 3-ம் தேதி 47 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சிவகங்கையை சேர்ந்த அஜித் (எ) அஜித்குமார்(25), ஆதிஸ்வரன்(29) ஆகிய 2 பேரை இன்று கைது செய்து நகையை மீட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை மாலை 5.45 மணிக்குள் (நவ.7) <
பழநி முருகன் கோயிலில் நவ.2 கந்த சஷ்டி விழா துவங்கியது. சூரசம்ஹாரம் நாளை (நவ.7) மாலை நடக்கும் நிலையில் காலை 11:00 மணி முதல் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கமாட்டார்கள். அன்றிரவு நடக்கும் தங்கரத புறப்பாடும் நடைபெறாது. ஏழாம் நாளான நவ.8 திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சண்முகருக்கு, மாலையில் பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ‘அவகடா’ துவக்கத்தில் காபிக்கு மத்தியில் ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டது. இவற்றின் தேவை ஆண்டுதோறும் அதிகரிக்க விலையும் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விளைச்சல் வெகுவாக பாதித்தால் துவக்கத்திலே கிலோ ரூ.200 விற்றது. தற்போது ரூ.300 வரை விலை போகிறது. இதனால் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் அவகடா மரங்களில் உள்ள காய்களை நுாதனமாக திருடுகின்றனர்.
திண்டுக்கல் கோயமுத்தூர் இடையே முன்பதிவு இல்லாத மெமு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவையை நவம்பர் 30 வரை ரயில்வே நிர்வாகம் நீட்டித்துள்ளது. கோயமுத்தூர் to திண்டுக்கல் மெமு சிறப்பு ரயில் (06106) – காலை 9:35க்கு புறப்பட்டு மதியம் 1:30 மணிக்கு திண்டுக்கல் வந்து சேரும். திண்டுக்கல் to கோயம்புத்தூர் சிறப்பு ரயில் (06107) – மதியம் 2:00 க்கு புறப்பட்டு மாலை 5:50க்கு கோவை சென்றடையும்.
தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பஸ்கள் 24 மணி நேரமும் பயன்பாட்டில் இருந்தது. நவ.3 சிறப்பு பஸ்கள் மூலம் திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகத்திற்கு ரூ.1.12 கோடி, நவ.4 ரூ.1.61 கோடி என 2 நாளில் ரூ.2.73 கோடி வசூலானது. இந்த விடுமுறை நேரத்தில் சிறப்பு பஸ்களில் பணியாற்றிய பணியாளர்களுக்கு மண்டல போக்குவரத்து அலுவலகம் சார்பில் நன்றி தெரிவித்து சர்க்குலர் அனுப்பப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
வழக்கமாக மரத்தின் உச்சியில் தான் வாழைமரம் தார்போடும். ஒரு சில மரங்கள், மரத்தின் நடுவில் தார்போடும். ஆனால் வாழை மரத்தின் அடியில் தார் போட்டிருப்பதை பார்த்திருக்கிறீர்களா? ஆம், பழனி அருகே ராமபட்டணம் புதூர் கிராமத்தில் ரகு என்பவரின் தோட்டத்தில் உள்ள வாழை மரத்தின் அடிப்பகுதியில் வாழைத்தார் முளைத்துள்ளது. அப்பகுதி மக்கள் வந்து பார்த்து செல்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் விஜயகுமாரி. இந்நிலையில் இவர் திருச்சி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி திருச்சி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
Sorry, no posts matched your criteria.