India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பட்டியலின மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக தொண்டாற்றி வருவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. www.tn.gov.in/ta/forms/deptname/1-ல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே முத்தழகுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் போக்குவரத்து வாகனங்களை செல்ல விடாமல் நடுரோட்டில் துண்டை விரித்து தூங்கியபடி அட்டகாசம் செய்தார். அதோ போல் திண்டுக்கல்லில் நடு ரோட்டில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு டிவைடரில் அரை நிர்வாணத்தில் அமர்ந்தபடி குடிபோதையில் ஒருவர் யோகாசனம் செய்து கொண்டிருந்தார்.
பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சனையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ம் தேதி மலைக்கோவிலில் காப்பு கட்டுகளுடன் விழா துவங்கியது. நேற்று மாலை கிரிவலப் பாதையில் உள்ள அசுரர்களை வதம் செய்யப்பட்டது. அதை கொண்டாடும் விதமாக இன்று மலைக்கோவிலில் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
திண்டுக்கல், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் நேற்று சூரசம்ஹாரம் நடந்த நிலையில் இன்று திருக்கல்யாணம் நடக்க இருக்கிறது. இதற்காக அதிகாலை முதலே வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இங்கு பழனி காவல்துறை சார்பில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒலிபெருக்கியின் மூலம் செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தில் விலை கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் இருந்து நவம்பர் மூன்றாம் தேதி வரை தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்தது. இந்நிலையில் தற்போது 1 நாளில் மட்டும் ரூ.1,320-க்கு விலை குறைந்துள்ளதால் திண்டுக்கல், நிலக்கோட்டை நகை கடைகளில் எதிர்பார்த்த அளவு பொதுமக்கள் நகையை வாங்கிச் செல்வதாக நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.) / வட்ட வழங்கல் அலுவலகங்களில் வரும் 9ஆம் தேதி அன்று பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று திண்டுக்கல் நகர் மற்றும் ஊரகங்களான கொடைக்கானல், நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய இடங்களில் இரவு ரோந்து காவலர்களின் விவரத்தையும் அவர்களது தொலைபேசி எண்ணையும் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.
➤பழனியில் சூரசம்ஹார விழா ➤ஊராட்சி பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு ➤ஆசை வார்த்தைகள் பேசி உங்கள் பணத்தை பறிக்க வாய்ப்பு ➤தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு ➤முதல்வர் மாநில விளையாட்டு விருது விண்ணப்பிக்க அழைப்பு ➤மாநில தடகள போட்டிக்கு அரசு பள்ளி மாணவி தேர்வு
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சமூக நலன் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று முகநூல் பக்கத்தில் சமூக வலைதளங்களில் பல போலியான நபர்கள் வலம் வருகின்றனர். அவர்கள் உங்களிடம் ஆசை வார்த்தைகள் பேசி உங்கள் பணத்தை பறிக்க வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளனர். இது தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் உதவி எண்: 1930 இணையதளம்: www.cybercrime.gov.in தொடர்பு கொள்ளலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தட்டச்சு தேர்வின் முடிவு இன்று வெளியாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய ஜூனியர், சீனியர் ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்வுகளுக்கான தட்டச்சு முடிவு இன்று வெளியாகி உள்ளது. இத்தேர்வு முடிவுகளை https://tndtegteonline.in/GTEOnline/ என்ற இணையதளத்தில் காணலாம்.
Sorry, no posts matched your criteria.