India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, கோவை சரக டி.ஐ.ஜி சசிமோகன் திண்டுக்கல்லுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி சாமிநாதன் கோவைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பாதுகாப்பு மற்றும் நிர்வாக நலன் கருதி இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திண்டுக்கல், குமரன் திருநகரை சேர்ந்த ரவி மற்றும் அவரது மனைவி கோகிலா இருவரும் இருசக்கர வாகனத்தில் சாணார்பட்டி அருகே சென்று கொண்டிருந்தனர். கோபால்பட்டி விளக்குரோடு பகுதியில் எதிர்பாராதவிதமாக வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில், பின்னால் அமர்ந்திருந்த கோகிலா கீழே விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவத்தில் கணவர் ரவி காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.28) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட மக்களே, முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <

திண்டுக்கல் மக்களே, பெடரல் வங்கியில் (Federal Bank) காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.38,666 முதல் ரூ.55,833 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <

திண்டுக்கல் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன் மேன் வந்து சேவையை சரிசெய்வார். இதனை SHARE IT.

சின்னகரட்டுப்பட்டியில் ரயில் தண்டவாளம் அருகே மூதாட்டி இறந்து கிடப்பதாக பழனி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போது மூதாட்டி அங்கு இறந்து கிடந்தார். அவரது கையில் பழனிசாமி என்ற பச்சை குத்தப்பட்டு இருந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. விசாரனையில் கோவை – மதுரை ரயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25-க்குள் <

திண்டுக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.