Dharmapuri

News January 28, 2025

மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற ஜன.31ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும், கருத்துகளையும் எடுத்து கூறி பயனடையலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 28, 2025

தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி

image

தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அங்கு வந்த 2 பேர் கையில் வைத்திருந்த கேனில் இருந்த டீசலை உடல் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தி விசாரித்த போது பழைய ஓட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த தசரதன் இவரது மனைவி பாஞ்சாலை என்பது தெரியவந்தது.

News January 28, 2025

தர்மபுரியில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம்

image

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (ஜன.31) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. எனவே, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News January 27, 2025

தருமபுரியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

image

நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின், வழிகாட்டுதல்படி, அதியமான் ஜல்லிக்கட்டு பி ஆர் பேரவை, நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா வருகின்ற பிப்.14 வெள்ளிக்கிழமை அன்று, தமிழக அரசு விதிமுறைகளுடனும், மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல் படியும் நடைபெறும் என அதியமான் ஜல்லிக்கட்டு பி ஆர் பேரவை அறிவித்துள்ளது. இந்த தகவலை உங்க ஊர் மக்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 26, 2025

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது

image

சேலத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை நேற்று முன்தினம் கோவில் வெள்ளாறு பகுதியை சேர்ந்த சங்கர் (21) என்பவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று, தொப்பையாறு டேம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்தன் பேரில் பெற்றோர் தொப்பூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.

News January 25, 2025

உங்கள் ஊர் செய்தி வே2நியூஸ் மூலம் சென்றடைய

image

நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? <>இங்கே க்ளிக் பண்ணுங்க<<>>

News January 25, 2025

அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம்

image

தருமபுரி மாவட்டத்தில் நாளை(ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினம் கிராம சபைக் கூட்டம் நாளை காலை 11.00 மணி முதல் நடத்தப்படவுள்ளது. இந்த செய்தியை உங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News January 25, 2025

தனியார் பஸ் மோதி எல்ஐசி ஏஜென்ட் பலி

image

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வெங்கடசமுத்திரத்தில் வசித்து வரும் சிவசங்கர் எல் ஐ சி ஏஜென்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். பணி நிமித்தமாக இன்று சாமியாபுரம் கூட்ரோட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது வெங்கடசமுத்திரம் அருகே சேலத்தில் இருந்து பொம்மிடி நோக்கி வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 25, 2025

தருமபுரியில் இன்று ரேஷன் குறைதீர் முகாம்

image

பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், தருமபுரி மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், தனி வட்டாட்சியா் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் குறைதீர் முகாம்கள் இன்று நடத்தப்படவுள்ளன. குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் உள்ளிட்ட சேவைகளுக்கு மனு வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 25, 2025

அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம்

image

தருமபுரியில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நாளை (ஜன.26) ஊராட்சி தலைவர்கள் தலைமையில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்படும். மேலும், ஒப்புதல் தீர்மானங்களும் கொண்டு வரப்படும். இதனால் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

error: Content is protected !!