India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி வேளாண்மை இணை இயக்குனர் குணசேகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு விதைப்பண்ணையில் கன்றுகள் தயார் நிலையில் உள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டடிற்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாட்டை குறைத்து மண்வளத்தை மேம்படுத்த மாவட்டத்தில் 1, 10, 000 மரக்கன்றுகள் விலையில்லாமல் வழங்க முடிவு செய்யபட்டுள்ளது. எனவே, அருகே உள்ள வேளாண் மையங்களில் மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
பாப்பிரெட்டிபட்டி அடுத்த போதகாடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ். இவரது மனைவி ஆர்த்தி கடந்த 10-ம் தேதி மர்மமாக இறந்தார். இதுகுறித்து அரூர் டிஎஸ்பி ஜெகநாதன் விசாரணை மேற்கொண்டார். அப்போது குடும்பத்தகராறில். மனைவி ஆர்த்தியை கணவன் கோவிந்தராஜ் அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. எனவே, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் அவரை கைது செய்து அரூர் நீதிபதியிடம் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் (குரூப் – II) தேர்வானது நாளை (செப் 14) நடைபெறவுள்ளதால் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 101 தேர்வு மையங்களில் தேர்வு நடைப்பெற உள்ளது. மேலும், தருமபுரி மாவட்டத்தில் 27,540 தேர்வு எழுத விருக்கின்றனர். தேர்வர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது எனவும் தேர்வர்கள் தேர்வுகூடத்திற்கு உரிய நேரத்தில் வர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சி தலைவர் கூறியுள்ளார்.
தருமபுரி மேற்கு திமுக மாவட்ட கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் நாளை அரூர் கொங்கு வேளாளர் கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை தருமபுரி மேற்கு திமுக மாவட்ட கழக செயலாளார் பழனியப்பன் நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த மாதையன்(65). கூலி தொழிலாளியான இவர் நேற்று தனது மனைவி ருக்மணியுடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். தொப்பூர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது லாரி ஒன்று டூவீலர் மீது மோதியது. இதில் ருக்மணி கண் முன்னே கணவர் பலியானார். ருக்மணி படுகாயம் அடைந்தார். இது குறித்து தொப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. இன்று தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரிய ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் மருத்துவ உதவியாளருக்கு அறிவியல் சார்ந்த பட்டப்படிப்பு, இரண்டு ஆண்டு மருத்துவ படிப்புகள், ஓட்டுனருக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி, கனரக வாகன ஓட்டுனர் உரிமம் ஆகியவை அடிப்படை கல்வித் தகுதியாக உள்ளது.
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.24 கோடியில் நவீன அவசர சிகிச்சை சிறப்பு பிரிவு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது என உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் நாகவேந்தன் கூறியுள்ளார். விபத்துகளில் படுகாயம் அடைவோருக்கு தேவையான உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்படும் எனவும் இந்த அவசர சிறப்பு சிகிச்சை பிரிவிற்கான பணிகள் இறுதிகட்ட நிலையில் உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்
இன்று தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. சோ. மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 73மனுக்கள் பெறப்பட்டு 70 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
பாப்பாரப்பட்டி போலீஸ் காலனியை சேர்ந்த மூர்த்தி, முரளி இருவரும் 11ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்தாக தெரிகிறது. இதனை மாணவியின் அக்கா & அவரது கணவர் தட்டி கேட்டதால், அவர்கள் இருவரையும் மூர்த்தியும், முரளியும் தாக்கி உள்ளனர். இதுகுறித்து நேற்று பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மூர்த்தி, முரளி இருவரையும் காவலர்கள் கைது செய்தனர்.
தர்மபுரியில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பேரிளம்பெண்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளிய முறையில் பெற இணையதளத்தின் மூலமாகவும் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாகவும் தங்கள் விபரங்களை பதிவு செய்து உறுப்பினராகலாம். மேலும் www.tnwldowwlfarebord.tn.gov.in மூலம் உறுப்பினர்கள் உதவிகளை பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.