India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், சிறுதொழில்தொகுப்புகள், உற்பத்திகுழுக்கள், உற்பத்தியாளர் கூட்டமைப்புகள், வட்டார வணிக வளஅமைப்புகள், தங்களது உற்பத்தி பொருட்களை மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பினால் பொருட்களின் விபரங்களை https://exhibition.mathibazaar.com என்ற இணையத்தில் பதிவு செய்து பயன்படலாம் என மாவட்டஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக கோவிந்தசாமி திமுக தலைவர்களை தரக்குறைவாக மிகவும் தரம் தாழ்ந்து பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்மபுரி மேற்கு மாவட்டம் மொரப்பூர் மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் K.M.ரத்தினவேல் தலைமையில் பேரூராட்சி தலைவர் வடமலை முருகன், மகளிர் அணியினர் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் இன்று மனு அளித்தனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட செங்கோட பட்டி கிராமத்தைச் சார்ந்த துரைசாமி என்பவரையும், பொப்பிடி அருகே உள்ள பூனையின் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரையும் நேற்று இரவு ஒற்றைக் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தனர். இந்நிலையில் வனத்தை சுற்றி உள்ள கிராமங்களில் வனத்துறை அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் யானை நடமாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27.09.2024 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம்.
பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு நேற்று முன்தினம் அதிமுக சார்பில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழா பொதுகூட்டத்தில் கருணாநிதி மற்றும் திமுக மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோரை பற்றி தரக்குறைவாக பேசியதாக பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி மீது பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் இன்று பாப்பிரெட்டிப்பட்டி நகர செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் திமுகவினர் புகார் அளித்தனர்.
தருமபுரியில் வருகிற அக்டோபர் 4 முதல் 14 வரை தகடூர் புத்தகப் பேரவை நடத்தும் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு 24.09.24 நாளை தருமபுரி அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறையில் பல கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பட்டி மன்றம் போன்றவை நடைபெற உள்ளன. இந்நிகழ்வை கல்லூரி முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர் ஆகியோர் நடத்துகின்றனர். ஷேர் பண்ணுங்க.
தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி காலை 10 மணி முதல் தருமபுரி மாவட்ட ஆட்சியர், கல்லூரி கல்வி இணை இயக்குநர் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான அரசுப் பணி பேராசிரியர்கள் தொழிலாளர்கள் பங்கு பெறுகின்றனர். விளையாட்டுப் போட்டிக்கு தங்கள் பெயரை பதிவு செய்தவர்கள் கலந்து கொள்கின்றனர்கள்.
தர்மபுரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தகடூர் புத்தக பேரவை சார்பில் புத்தக திருவிழா வருகிற அக் 4 ஆம் தேதி முதல் 14- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. . இதற்காக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கவுரவ் குமார்,பொறுப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி தொடங்கி வைத்தார். போட்டிகளில் 225 வீரர்களும் 129 வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வரும் (செப்-30)அன்று கடகத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. 10, 12, டிப்ளமோ, டிகிரி தகுதி உடையவர்கள் தங்களது சான்றிதழ்களுடன் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரில் அணுகலாம் என கூறப்பட்டுள்ளது. தொடர்புக்கு: 9442286874.
Sorry, no posts matched your criteria.