Dharmapuri

News September 30, 2024

செந்தில் பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்து தர்மபுரி எம்பி மணி

image

சென்னையில் நேற்று புதிய அமைச்சர்களாக பொறுப்பு ஏற்ற அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சேலம்.ராஜேந்திரன்,
கோ.வி.செழியன் ஆகியோரை தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான
பழனியப்பன், தருமபுரி எம்பி மணி ஆகியோர் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். இதில் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News September 30, 2024

சுற்றுலா துறை அமைச்சருக்கு தர்மபுரி எம்பி வாழ்த்து

image

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சராக ராஜ்பவனில் ராஜேந்திரன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி, கிழக்கு திமுக மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் ஆகியோர் நேரில் சென்று அமைச்சர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

News September 29, 2024

இரட்டை கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிக்கு கால் முறிவு 

image

தருமபுரி மாவட்ட தனிப்படை போலீசார் இரட்டை கொலை செய்த தேவராஜ், அஷ்வின் உட்பட 7 பேரை கைது செய்து 4 பேரை காவல்துறையினர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தேனி மாவட்டத்தை சேர்ந்த தேவராஜை கைது செய்ய முயன்ற போது தப்பித்து ஓட முயற்சி செய்ததில் தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

News September 29, 2024

தருமபுரி கொலை குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

image

மேல் எண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார், பெருமாள், வெங்கடாஜலம், ஆகியோருக்கு இடையே நிலப்பிரச்சனை இருந்தது. இந்நிலையில், பெருமாள், வெங்கடாஜலம், ஆகியோரை ராஜ்குமார் மரக்கட்டையால் தாக்கியதில் சிசிக்சை பெற்று வந்த, வெங்கடாஜலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்கில் குற்றவாளி ராஜ்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

News September 28, 2024

தர்மபுரியில் திருட்டில் ஈடுபட்ட காவலர் கைது

image

குத்தலஅல்லியைச் சேர்ந்த காவலர் சக்தி இவருக்கு வயது 30. விடுமுறையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட செல்லியம்பட்டி வந்தபோது வீடு புகுந்து கொள்ளை முயற்சி செய்ததை அடுத்து பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்று, கைதான சிறைக் காவலர் இன்று செப்டம்பர் 28 பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News September 28, 2024

தர்மபுரியில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் தமிழக வானிலை ஆய்வு மையம் இன்று செப்டம்பர் 28 வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தற்போது மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News September 28, 2024

ரூ. 11.67 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனை

image

தர்மபுரி 4 ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 2,145 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதிகபட்சமாக 1 கிலோ 676 ரூபாய்க்கும், சராசரியாக கிலோ 544 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக கிலோ 304 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று ரூ. 11,67,664 பட்டுக்கூடுகள் விற்பனையானதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

News September 28, 2024

பொம்மிடியில் ரூ.15 கோடியில் மேம்பாட்டு பணிகள்

image

தருமபுரியில் மிகப்பழமையான ரயில் நிலையமான பொம்மிடி ரயில் நிலையம் 1867ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இந்த ரெயில் நிலையத்தை புது பொலிவுடன் மேம்படுத்தும் பணிகள் ரூ.15 கோடியே 18 லட்சம் மதிப்பில் தொடங்கி நடந்து வருகிறது. இதில், பயணிகள் காத்திருப்பு கூடம், 2000 பேர் நின்று ஏறக்கூடிய வகையில் நடை மேடைகள் தங்கும் விடுதி, உணவு விடுதிகள் அமைய உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 28, 2024

தர்மபுரியில் கடை அடைப்பு அறிவிப்பு

image

தருமபுரி காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்த கோரி வரும் அக்டோபர் 4 ஆம் தேதி காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மனி வரை தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடை அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அதேசமயம் பென்னாகரத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்க பெருமக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாமக கௌரவ தலைவருமான ஜி.கே.மணி அழைப்பு விடுத்துள்ளார்.

News September 27, 2024

தருமபுரி கலெக்டர் அறிவுறுத்தல்

image

தர்மபுரி ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு சரிவர எடுத்துச் சென்று அவர்களின் உற்பத்தியையும் வருமானத்தையும் அதிகரிக்கும் வகையில் அனைத்து நில அலுவலர்களுக்கும் மற்றும் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க பெறுவதை உறுதி செய்யப்பட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!