Dharmapuri

News August 30, 2025

தர்மபுரியில் விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக தர்மபுரி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை துவங்கி வைத்தனர்.

News August 29, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.29) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக கரிகால் பாரிசங்‌கர் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர்!

News August 29, 2025

தர்மபுரி: இலவச தையல் மிஷின் வேணுமா?

image

தர்மபுரி மக்களே! பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000க்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தர்மபுரி மாவட்ட சமூக நல அலுவலரை (04342-233088) அனுகலாம். SHARE பண்ணுங்க.

News August 29, 2025

தருமபுரி: B.Sc,B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

image

தருமபுரி மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் <>இங்கு கிளிக் <<>>செய்து செப்.17ஆம் தேதிக்குள் விண்ணபிக்கலாம். B.Sc, B.E. படித்த நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 29, 2025

தர்மபுரி மாவட்டத்தில் இன்றே கடைசி நாள்

image

தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் மற்றும் வங்கிகள் உள்ள 2581 உதவியாளர் காலி பணியிடங்களில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 104 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 29 இன்று கடைசி நாள் மாலை 5:45 மணி வரை http://www.drbcud.in என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பினை தருமபுரி மாவட்ட படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 29, 2025

தருமபுரி: இதை செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்து!

image

தருமபுரி மக்களே உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்ய வாய்ப்புள்ளது. ஆம் போலி ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதை தடுக்கும் நோக்கில் கேஒய்சி சரிபார்ப்பை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு ஆகஸ்ட் 31 கடை தேதி ஆகும். இதற்கு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான<> TNPDS போர்ட்டலில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். முடியவில்லை என்றால் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று பயோமெட்ரிக் முறை மூலம் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்கலாம். மறக்காம ஷேர் பண்ணுங்க

News August 29, 2025

தருமபுரி மக்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஆக.29) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️ மல்லிகா பேலஸ் திருமண மண்டபம், பாப்பிரெட்டிப்பட்டி
▶️ ஊராட்சி மன்ற அலுவலக விளையாட்டு மைதானம், மாரவாடி
▶️ சமுதாயக் கூடம், பூதனஹள்ளி
▶️ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஜக்குபட்டி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 29, 2025

தர்மபுரி: தேன் எடுக்க சென்றவர் பலி

image

அரூர் அடுத்த கூடலூரை சேர்ந்தவர் நைனாமலை. நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கழுத்தில் துண்டை கட்டி கொண்டு மரத்தில் தேன் எடுக்க முயன்றார். அப்போது தேனீக்கள் கொட்டியதால் வேகமாக கீழே இறங்கியதால் கையில் இருந்த சில்வர் பக்கெட் மாட்டிக்கொண்டது. இதனால் கழுத்தில் துண்டு இருக்கவே, இதில் அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

News August 29, 2025

தர்மபுரி மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஆக.29) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️ மல்லிகா பேலஸ் திருமண மண்டபம், பாப்பிரெட்டிப்பட்டி
▶️ ஊராட்சி மன்ற அலுவலக விளையாட்டு மைதானம், மாரவாடி
▶️ சமுதாயக் கூடம், பூதனஹள்ளி
▶️ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஜக்குபட்டி
ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 28, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.28) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக மனோகரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!