India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு நிதி உதவி பெறும் தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு மழையின் காரணமாக 16/10/2024 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. அன்றைய நாளில் ஈடுபட்ட வகையில் நாளை பள்ளிகள் வேலை நாட்களாக செயல்படும் என அறிவிக்கப்படுகின்றது என்று தருமபுரி முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மற்றவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க
IDBI வங்கியில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 650 காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த 20-25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
தருமபுரி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வழியாக பல்வேறு தனியார் சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இதில், தருமபுரி நகராட்சி பகுதியில் குறிப்பிட்ட தனியார் சேனலில் ஆபாச படம் ஒளிபரப்பானதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் பார்வையிடும் சேனலில் இதுபோன்ற நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்படுவது வருத்தம் அளிப்பதாக மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து வருகிறது.
அரூர் அருகே ஷேர் ஆட்டோவில் பெண்கள் கூலி வேலைக்கு சென்றிருந்தனர். இதில், மொத்தம் 9 பெண்கள் பயணம் செய்த நிலையில் ஷேர் ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 9 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரியில் அமைந்திருக்கும் முக்கிய தீர்த்த ஸ்தலம் அனுமான் தீர்த்தம் ஆகும். இந்த அனுமன் தீர்த்தம், இராமாயணத்துடன் தொடர்புள்ள தீர்த்தம் ஆகும். தீர்த்தமலைக்கு வருவோர் கண்டிப்பாக அனுமான் தீர்த்தத்தைக் கண்ட பின் தான் தீர்த்தமலை செல்வர். மேலும் இந்த அனுமன் தீர்த்தமலையானது, நோய் தீர்க்கும் அற்புத மலையாகும். இங்குள்ள தீர்த்தங்களில் நீராடுவதன் மூலம், பல வகையான நோய்கள் நீங்குகின்றன. ஷேர் பண்ணுங்க
தருமபுரி மாவட்டத்தில் பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் 7 நிறுவனங்களில் 55 இளைஞர்களுக்கு 12 மாத இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு வயது வரம்பு 21 முதல் 24 ஆண்டுகள் ஆகும். கல்வித்தகுதி ஐ.டி.ஐ. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் டிகிரி ஆகும். மேலும் விபரங்களுக்கு <
ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் <
தர்மபுரி வெண்ணாம்பட்டி ஆயுதப்படை கல்யாண மண்டபம் எதிரே வசித்து வந்தவர் ராஜேந்திரன் (68).இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு, ராஜேந்திரனை தெருநாய் ஒன்று கடித்துள்ளது. அதற்கு அவர் ஊசி போடாமலும், முறையாக சிகிச்சை பெறாமலும் அலட்சியமாக இருந்து விட்டார். இதனால், ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர் நோய்த்தொற்றின் வீரியத்தால் உயிரிழந்தார்.
கம்பைநகர் அடுத்த போளையம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகன் நேதாஜி (13), அங்குள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடிய போது ஊஞ்சலில் மாட்டி நேதாஜி உயிரிழந்தார். இச்சம்பவம் அறிந்து வந்த கம்பைநல்லூர் காவல்துறை இவரது இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றது.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.S.மகேஸ்வரன்,B.com.BL., அவர்களின் தலைமையில் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 79 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு 79 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.
Sorry, no posts matched your criteria.