Dharmapuri

News March 12, 2025

தர்மபுரியில் அரசு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி

image

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலம் தமிழ்நாடு அரசின் அனைத்து போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மையத்தின் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு தொடர்பான புத்தகங்கள் இணைய வசதி கொண்டு நூலகம் மற்றும் 20க்கும் மேற்பட்ட கணினிகள் செயல்பட்டு வருகின்றன. பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

News March 11, 2025

பிரசித்தி பெற்ற கொல்லாபுரி அம்மன் கோயில்

image

தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இருமத்தூர் பகுதியில் பிரசித்தி பெற்ற கொல்லாபுரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. வீடுகளில் பொருட்கள் எடுவும் திருடு போய் இருந்தால் இக்கோயிலில் உள்ள மரத்தில் கோழிகளை உயிருடன் கட்டி இந்த மரக்கிளைகளில் தொங்க விட்டால், கோழிகள் இறந்து அவற்றின் உடல் காய்ந்து போவதற்குள் திருட்டு போன பொருட்கள் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க

News March 11, 2025

அரூர் அருகே தெருவில் நடந்து சென்றவர்களை கடித்த வெறி நாய்

image

அரூர் அடுத்த கருப்பிலிப்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன் இவரது வளர்ப்பு நாய், நேற்று காலை தெருவில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி, பிரதாப், இந்திராணி மற்றும் 2 வயதுடைய குழந்தையை கடித்தது. இதில் காயமடைந்த 4 பேரும் அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாயை பிடிக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

News March 11, 2025

தமிழ் தெரிந்தால் அரசு வேலை! நாளை கடைசி நாள்

image

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மார்.12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பியுங்கள்

News March 11, 2025

தருமபுரி அருகே ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது

image

அ.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் வினோத் இவர் +1 படிக்கும் மாணவியிடம் பேச்சு கொடுத்து கடந்த 7ல் ஆட்டோவில் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததை அவரது தாய் கேட்டபோது, தனக்கு ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்ததை கூறியுள்ளார். மாணவியின் தாய் புகார்படி பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து ஆட்டோ டிரைவர் கைது செய்தனர்.

News March 10, 2025

தருமபுரியில் கடும் வெப்ப அலை வீசும்

image

தருமபுரியில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதத்தின் இறுதி தொடங்கி மே மாதத்தில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது எனவும், பகல் நேரத்தில் வெளியில் செல்லும் மக்களுக்கு அசெளகரியமான சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இந்த செய்தியை உங்க ஊர் மக்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News March 10, 2025

தண்ணீர் தொட்டியில் மூழ்கிய 2வயது பெண் குழந்தை பலி

image

காட்டம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (31) லாரிடிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி ஆனந்தி என்ற மனைவியும், 5 மற்றும் வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இன்று காலை பெண் குழந்தை ஹர்னிகாவை (2) சோமனஅள்ளியில் உள்ள தனது தாய் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த அவர் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் உயிரிழந்தார். குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

News March 10, 2025

பரோடா வங்கியில் வேலை: நாளையே கடைசி

image

பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News March 10, 2025

ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

image

கிருஷ்ணாபுரம் அருகே மோட்டுப்பட்டியை சேர்ந்த பழனி இவரது மகள் மோனிகா பிளஸ் 2 படித்து வருகின்றார். உறவினர் ஒருவரின் இறப்பு சடங்கிற்காக பெற்றோருடன் நேற்று மார்ச் 09 ஒகேனக்கல்லுக்கு வந்த நிலையில், ஆற்றில் குளித்த போது மாணவி சூழலில் சிக்கி மூழ்கினார். மாணவி மோனிகாவை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர். மேலும் இது குறித்து ஒகேனக்கல் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 9, 2025

தருமபுரியில் அரசு வேலை

image

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதியாக மருந்தியல் துறையில் இளங்களை அல்லது டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். மாதம் ரூ.35,400 முதல் 1.30 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் 1.7.2025 தேதிபடி 18 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த இணையதளத்தில்<<>> நாளை (மார்ச்.10) விண்ணப்பிக்க வேண்டும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!