Dharmapuri

News September 18, 2025

தர்மபுரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

தர்மபுரியில் இன்று (செப்.17) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ தர்மபுரி நகராட்சி – பிபிசி மஹால், எஸ்.வி சாலை
✅ தர்மபுரி வட்டாரம் – ஆர்பிஆர்எஸ், மண்டபம், செட்டிகரை
✅ பாப்பிரெட்டிப்பட்டி – சமுதாயக் கூடம், இருளப்பட்டி
✅ பென்னாகரம் – பிலியனூர் நாகாதாசம்பட்டி கேபிஎஸ் மஹால்
✅ பாலக்கோடு – எம்.செட்டிஹள்ளி (விஎம் மஹால்)
✅ அரூர் – குமுதம் மஹால், கே.வெட்டர்பட்டி (SHARE IT)

News September 18, 2025

மை தருமபுரி அமரர் சேவை மூலம் நல்லடக்கம்

image

தருமபுரி மாவட்டத்தில் ஆதரவின்றியும் ஏழ்மையில் இறந்த நான்கு முதியவர்களின் உடல்களை, தங்கள் உறவாக கருதி மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர். இந்த நிகழ்வில் காரிமங்கலம் மற்றும் பென்னாகரம் எல்லைகளில் காவலர்கள், சமூக அமைப்பினர் கலந்து கொண்டனர். இதுவரை 166 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் இவர்களின் சேவைக்கு பாராட்டும் ஆதரவும் தந்து வருகின்றனர்

News September 17, 2025

ரூ.356.48 கோடி ஓய்வூதியம்; ஆட்சியர் தகவல்

image

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தேசிய முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம்,தமிழர்களுக்கான ஓய்வூதியம் என 59,365 நபர்களுக்கு ரூ.356.48 கோடி ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.என ஆட்சியர் சதிஸ் தெரிவித்துள்ளார்.

News September 17, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.17) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ராஜா சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News September 17, 2025

தருமபுரி: 10th போதும், மத்திய அரசு வேலை!

image

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 1.கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி, 2.சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100, 3.வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு) கடைசி தேதி: செப்டம்பர் 28 இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News September 17, 2025

தர்மபுரி: பெற்றோர் கண்டித்ததால் உயிரை மாய்த்த மாணவி

image

தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி வைஷ்ணவி, அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் பெற்றோரின் கண்டிப்புக்கு ஆளானார். இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மதிகோன்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 17, 2025

தருமபுரி: தொடங்கியது புரட்டாசி! இங்கெல்லாம் கட்டாயம் போங்க

image

இந்த ஆண்டு புரட்டாசி மாதம் இன்று தொடங்குகிறது. இந்த மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமாகும். மேலும் இந்த மாதத்தில் விரதம் இருப்பதும், சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது என நம்பப்படுகிறது. தருமபுரியில் இருக்கும் சில முக்கிய பெருமாள் கோயில்
✅ தருமபுரி பரவாசுதேவப் பெருமாள் கோயில்
✅ குமாரசாமிப்பேட்டை சென்னகேசவ பெருமாள் கோயில்
✅ கோவிலூர் சென்னகேசவ பெருமாள் கோயில். (SHARE)

News September 17, 2025

தருமபுரி: 10ஆம் வகுப்பு போதும்! ரூ.69,100 வரை சம்பளம்

image

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு,
▶️ கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
▶️ சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100
▶️ வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு)
▶️ கடைசி தேதி: செப்டம்பர் 28
இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News September 17, 2025

தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும் 19.09.2025 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ் தெரிவித்துள்ளார். இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர் போன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். ஷேர் பண்ணுங்க!

News September 17, 2025

தருமபுரி: ஒரு செயலி போதும்! அத்தனை பிரச்னைகளும் தீர்வு

image

<>”மெரி பஞ்சாயத்து” மொபைல் செயலி<<>> மூலம் கிராம மக்கள் இனி எல்லா விதமான புகார்களையும் நேரடியாகப் பதிவு செய்யலாம். இதில் உள்ள ‘Grievance/Complaint’ பிரிவில் பெயர், கிராமம் மற்றும் புகார் விவரங்களை உள்ளீடு செய்து, தேவையான ஆவணங்களையும் இணைக்கலாம். புகார் செய்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை நேரடியாகக் கண்காணிக்க முடியும். ஷேர்

error: Content is protected !!